ரஷ்யா தனது முதல் COVID-19 தடுப்பூசிக்கு ஸ்பூட்னிக் V என்ற பெயரில் ஒப்புதல் அளித்ததை அடுத்து தற்போது, எபிவாகொரோனா (EpiVacCorona) என்ற தடுப்பூசிக்கு  ஒப்புதல் வழங்கியுள்ளது. இவற்றில், ஒழுங்குமுறை அங்கீகாரத்தைப் பெற்ற உலகின் முதல் தடுப்பூசி வேட்பாளரும் ஸ்பூட்னிக் V ஆகும்.

இரண்டாவது தடுப்பூசிக்கான அறிவிப்பை வெளியிட்ட ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின், "நோவோசிபிர்ஸ்கை தளமாகக் கொண்ட வெக்டர் மையம் எபிவாகொரோனா என்ற இரண்டாவது கொரோனா வைரஸ் தடுப்பூசியை பதிவு செய்துள்ளது" என்று கூறினார்.

சைபீரியாவை தளமாகக் கொண்ட வெக்டர் நிறுவனம் இதை உருவாக்கியது. எபிவாகொரோனா அதன் ஆரம்ப கட்ட மனித சோதனைகளை கடந்த மாதம் (செப்டம்பரில்) நிறைவு செய்தது. மருந்து சோதனைகள் மற்றும் மனித சோதனைகளின் முடிவுகளை இன்னும் வெளியிடவில்லை. ஆனால், இந்த தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் இன்னும் தொடங்கவில்லை. மேலும், முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் நிறைவடைந்த போதும் அதன் முடிவுகள் வெளியிடப்படவில்லை. 

"நாங்கள் முதல் மற்றும் இரண்டாவது தடுப்பூசியின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். நாங்கள் எங்கள் வெளிநாட்டு கூட்டாளர்களுடன் தொடர்ந்து ஒத்துழைத்து வருகிறோம், வெளிநாட்டில் எங்கள் தடுப்பூசியை ஊக்குவிப்போம். நோவோசிபிர்ஸ்கை தளமாகக் கொண்ட வெக்டர் மையம் எபிவாகொரோனா என்ற இரண்டாவது கொரோனா வைரஸ் தடுப்பூசியை பதிவு செய்துள்ளது" என்று புடின் கூறினார்.

மாஸ்கோவில் உள்ள கமலேயா நிறுவனம் உருவாக்கிய ஸ்பூட்னிக் வி, ஆகஸ்ட் மாதம் ரஷ்யாவில் பயன்படுத்த உரிமம் பெற்றது. எபிவாகோரோனாவைப் போலவே மூன்றாம் கட்ட சோதனைகளுக்கு முன்பும் ஸ்பூட்னிக் வி பதிவு செய்யப்பட்டது. ஸ்பூட்னிக் V இன் மனித சோதனை தற்போது மாஸ்கோவில் நடந்து வருகிறது. தற்போது புதிய தடுப்பூசி எபிவாகொரோனாவின் மனித சோதனை நவம்பர் அல்லது டிசம்பரில் தொடங்கும் என்றும், இதில் சுமார் 30,000 பங்கேற்பாளர்கள் ஈடுபடுவார்கள் என்றும் டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ரஷ்யா உருவாக்கியுள்ள ‛ஸ்புட்னிக்-வி' தடுப்பு மருந்தை இந்தியாவில் மனிதர்களிடம் பரிசோதனை செய்ய டாக்டர் ரெட்டி நிறுவனத்திற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் அமைப்பு(டிசிஜிஐ) ஒப்புதல் வழங்கியுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு எதிராக மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. ஆனால், முதலாவதாக ரஷ்யா மட்டும் கொரோனா வைரசுக்கு ‛ஸ்புட்னிக்-வி' என்ற மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்தது. இந்த மருந்தின் பாதுகாப்பு குறித்து விஞ்ஞானிகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். இந்த மருந்து தற்போது 3ம் கட்டமாக 40 ஆயிரம் பேருக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த மருந்தை இந்தியாவில் பரிசோதனை செய்யவும், விற்பனை செய்யவும் ரஷ்யாவுடன், இந்தியாவை சேர்ந்த டாக்டர் ரெட்டி நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, 10 கோடி டோஸ் மருந்தை டாக்டர் ரெட்டி நிறுவனத்திற்கு ரஷ்யா வழங்கும்.

‛ஸ்புட்னிக் - வி' மருந்தாக பதிவு செய்யப்படுவதற்கு முன்னர், ரஷ்யாவில் குறைந்தளவு மக்களிடமே பரிசோதனை செய்திருந்ததால், அதிகளவு மக்கள் தொகை கொண்ட, இந்தியாவில் அந்த மருந்தை பரிசோதனை செய்வது குறித்து டிசிஜிஐ அமைப்பு, டாக்டர் ரெட்டி நிறுவனத்திடம் பல கேள்விகளை எழுப்பியிருந்தது.

இந்நிலையில், ‛ஸ்புட்னிக்-வி' மருந்தை இந்தியாவில் 2 மற்றும் 3 ம் கட்ட பரிசோதனை செய்ய டிசிஜிஐ ஒப்புதல் வழங்கியுள்ளது. இது தொடர்பாக டாக்டர் ரெட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிரசாத் கூறுகையில், டிசிஜிஐ அமைப்பின் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றவோம். அனுமதி கிடைத்துள்ளது, பரிசோதனைக்கான எங்கள் முயற்சியில் கிடைத்துள்ள முன்னேற்றமாகும். கொரோனாவுக்கு எதிரான மருந்தை பாதுகாப்பானதாக கொண்டு வருவதில் உறுதியாக உள்ளோம் என தெரிவித்தார்.