தமிழ் திரையுலகின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக வளர்ந்து வரும் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற கோமாளி திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகிபாபு ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர்.

90'கிட்ஸ் அம்சங்களை கொண்ட கோமாளி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் அடுத்து இயக்கும் இந்த புதிய படத்தில் கதாநாயகனாகவும் நடிக்கவுள்ளதாக சில வாரங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இயக்குனர் பிரதீப் ரங்கநாதனின் இத்திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது.

முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தளபதி விஜய்யின் பிஊகில் படத்திற்கு பிறகு நகைச்சுவை நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடித்துள்ள நாய் சேகர் திரைப்படத்தை தயாரித்தது. இதனைத்தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் 22வது திரைப்படமாக இத்திரைப்படம் தயாராகிறது .

இயக்குனர் பிரதீப் ரங்கநாதனுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்நிலையில் முன்னணி நகைச்சுவை நடிகர் யோகிபாபு இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

A warm welcome to @iYogiBabu aboard #Ags22 @pradeeponelife @aishkalpathi @Ags_production @thisisysr #SathyarajSir #KalpathiAghoram #KalpathiGanesh #KalpathiSuresh @venkatmanickam5 @onlynikil pic.twitter.com/ucAk5TMIYX

— Archana Kalpathi (@archanakalpathi) January 1, 2022