தமிழ் சினிமாவில் சமகால ஆகசிறந்த இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் ராம். கடந்த 2007 ஜீவா நடிப்பில் வெளியான ‘கற்றது தமிழ்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் ராம். முதல் படத்திலே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் ராம். பின் 6 ஆண்டுகளுக்கு பின் ‘தங்க மீன்கள்’ என்ற படத்தை இயக்கி தானே நடித்தார். மிகப்பெரிய தாக்கத்தை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தி தேசிய விருது உட்பட பல விருதுகளை குவித்தது. அதன்பின் 4 ஆண்டுகளுக்கு பின் ஆண்ட்ரியா , வசந்த் ரவி ஆகியோரை வைத்து ‘தரமணி’ என்ற திரைப்படத்தை இயக்கினார். கலவையான விமர்சனம் பெற்றாலும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் தனி நாட்டம் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. பின் 2 ஆண்டுகளுக்கு பின் கடந்த 2019 ல் முன்னணி நடிகரான மம்முட்டி அவர்கள் நடிப்பில் வெளியான ‘பேரன்பு’ திரைப்படத்தை இயக்கினார் இயக்குனர் ராம். மிகப்பெரிய எதிர்பார்புடன் வெளியான பேரன்பு திரைப்படம் தமிழ் சினிமாவில் ஆகசிறந்த படைப்பாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

பின் இயக்குனர் ராம் அவர்களின் ஐந்தாவது படமாக ‘ஏழு கடல் ஏழு மலை’ படம் உருவாகி வந்தது. ‘மாநாடு' படத்தின் மிகப் பெரிய வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி V ஹவுஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் முன்னணி மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்க இவருடன் அஞ்சலி, சூரி மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு என் கே ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய மதி வி எஸ் படத்தொகுப்புப் செய்துள்ளார். மேலும் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

முன்னதாக ''காதல்னு வந்துட்டா மனசு மட்டுமல்ல; உடம்பு, உசுரு எல்லாம் பறக்கும்'' என்ற வசனத்துடன் படத்தின் டைட்டில் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. நீண்ட நாட்களாக படம் குறித்த எந்தவொரு அறிவிப்பும் வெளியாகாமல் இருந்த நிலையில் படத்தின் டப்பிங் பணியை நிறைவு செய்துள்ளது படக்குழு. இதுகுறித்து சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் நடிகர்கள் நிவின் பாலி, அஞ்சலி, சூரி ஆகியோர் டப்பிங் செய்யும் காட்சி இடம் பெற்றுள்ளது. தற்போது இந்த்த வீடியோவினை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். விடுதலை படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூரிக்கு மேலும் ஒரு வெற்றியாக இந்த படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.