அயோக்யா படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷால் ஹீரோவாக நடித்து வரும் படம் ஆக்ஷன்,துப்பறிவாளன் 2,அறிமுக இயக்குனர் அனந்துடன் ஒரு படம் என்று பிஸியாக நடித்து வருகிறார்.இவரது ஆக்ஷன் படத்தின் டீஸர் சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

தற்போது இவர் நடிக்கவிருக்கும் புதிய படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.அரிமா நம்பி,இருமுகன்,நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் ஷங்கர் விஷாலிடம் கதை சொல்லியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இந்த படம் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை பாலு தயாரிப்பார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.சமீபகாலமாக தான் நடிக்கும் படங்களில் பெரிதும் கவனம் செலுத்தி வருகிறார் விஷால், அவரோடு ஆனந்த் ஷங்கர் போன்ற ஒரு இயக்குனர் இணைகிறார் என்றபோது நல்ல ஆக்ஷன் நிறைந்த ஒரு படத்தை எதிர்பார்க்கலாம்.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.