மதுரையில் நடிகர் விஜய் ரசிகர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

சென்னையில் அதிமுக சார்பாக வைக்கப்பட்ட பேனர் விழுந்து இளம் பெண் சுபஸ்ரீ என்ற பெண், பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, பேனர் வைப்பது தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகள், தங்களின் விழாக்களில் பேனர் பயன்படுத்த வேண்டாம் என்று, கட்சித் தலைவர்கள் கேட்டுக்கொண்டார்கள்.

இந்நிலையில், மதுரை மாவட்ட விஜய் ரசிகர் மன்றத் தலைவர் தங்கபாண்டியன் பிறந்தநாளை முன்னிட்டு, விஜய் ரசிகர்கள், மிகப் பெரிய அளவில் போஸ்டர் ஒட்டி விளம்பரப்படுத்தியிருந்தனர். இதனால், உரிய அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதாக, விஜய் ரசிகர் ஜெயகார்த்திகை போலீசார் கைது செய்தனர்.

மேலும், மதுரை மாவட்ட விஜய் ரசிகர் மன்ற பொருளாளர் சதீஸ்குமார் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை தேடி வருகின்றனர். இதனால், தமிழகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.