பிச்சைக்காரன் 2 திரைப்படத்திற்கு பிறகு தற்போது விஜய் ஆண்டனி நடித்துவரும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி இருப்பதாக அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்திருக்கிறார். தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் திகழும் விஜய் ஆண்டனி அவர்கள் இயக்குனராக அவதாரம் எடுத்த திரைப்படம் தான் பிச்சைக்காரன் 2. அந்த வகையில் மலேசியாவில் பிச்சைக்காரன் 2 திரைப்படத்திற்கான பாடல் காட்சி ஒன்றின் படப்பிடிப்பின் போது படகில் பயங்கர விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்த விஜய் ஆண்டனி அவர்களுக்கு முகத்தில் மட்டுமே பல்வேறு எலும்பு முறிவுகள் ஏற்பட்டிருந்தன. படுமோசமான காயங்களில் இருந்து பூரண குணமடைந்து விஜய் ஆண்டனி மீண்டு வந்த பிறகு சமீபத்தில் பிச்சைக்காரன் 2 திரைப்படம் ரிலீஸாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும் பெற்றது.

தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்தடுத்து அட்டகாசமான திரைப்படங்கள் வெளிவர இருக்கின்றன. முன்னதாக தமிழ் படம் & தமிழ் படம் 2 ஆகிய படங்களில் ரசிகர்களின் மனதை கவர்ந்த இயக்குனர் CS.அமுதன் இயக்கத்தில் அதிரடி பொலிட்டிக்கல் திரில்லர் படமாக தயாராகி வரும் ரத்தம், இயக்குனர் பாலாஜி.கே.குமார் இயக்கத்தில் க்ரைம் திரில்லர் படமாக உருவாகி வரும் கொலை, ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் இயக்கத்தில் ஆக்ஷன் திரில்லர் படமாக தயாராகி வரும் மழை பிடிக்காத மனிதன் ஆகிய படங்களில் நடித்துள்ள விஜய் ஆண்டனி நடிப்பில் நீண்ட காலமாக ரிலீஸுக்காக காத்திருக்கும் திரைப்படம் அக்னி சிறகுகள். மூடர் கூடம் படத்தின் இயக்குனர் நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் இணைந்து நடித்த அதிரடி ஆக்சன் திரைப்படமான அக்னி சிறகுகள் திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இந்த வரிசையில் அடுத்ததாக வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, பாண்டியநாடு, ஜீவா, ஈஸ்வரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் தான் வள்ளி மயில். விஜய் ஆண்டனி உடன் இணைந்து சத்யராஜ், ஃபரியா அப்துல்லா மற்றும் இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் வள்ளி மயில் படத்தில், தெலுங்கு நடிகர் சுனில், ரெட்டின் கிங்ஸ்லி, விஜய் டிவி நிஷா மற்றும் யூட்யூப் பிரபலமான GP.முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். நல்லுசாமி பிக்சர்ஸ் மற்றும் தாய் சரவணன் இணைந்து வழங்கும் வள்ளி மயில் படத்திற்கு D.இமான் இசையமைக்கிறார். இந்நிலையில் வள்ளிமயில் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது தொடங்கி இருப்பதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. இது குறித்து தயாரிப்பாளர் தாய் சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில், நேற்று ஜூன் 12-ம் தேதி வள்ளிமயில் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல்லில் தொடங்கி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனை அறிவிக்கும் வகையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புதிய ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படம் மற்றும் பதிவு இதோ…