மக்களின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராகவும் நடிகராகவும் திகழும் விஜய் ஆண்டனி அவர்கள் நடிப்பில் கடைசியாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த கொலை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்தடுத்து அட்டகாசமான திரைப்படங்கள் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவர காத்திருக்கின்றன. முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய் ஆண்டனி அவர்களின் மூத்த மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனிடையே தமிழ் படம் படத்தின் இயக்குனர் CS.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் பொலிட்டிக்கல் திரில்லர் திரைப்படமாக தயாராகி இருக்கும் ரத்தம் திரைப்படம் வருகிற அக்டோபர் 6ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. தனது செல்ல மகள் உயிரிழந்த சோகத்தில் இருந்து விஜய் ஆண்டனி அவர்கள் மீண்டு வர நீண்ட காலம் எடுக்கும் என எல்லோரும் எதிர்பார்த்த நிலையில், தன்னால் யாருக்கும் எந்தவித நட்டமும் ஏற்படக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் விஜய் ஆண்டனி அவர்கள் தனது மீளா துயரத்திற்கு இடையே ரத்தம் திரைப்படத்தின் ப்ரமோஷன் பணிகளில் தற்போது ஈடுபட்டிருக்கிறார். விஜய் ஆண்டனி அவர்களின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியிலும் திரையுலகினர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு பாராட்டுகளையும் பெற்றுள்ளது. அந்த வகையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்தியேக பேட்டி கொடுத்த விஜய் ஆண்டனி அவர்கள் தனது திரை பயணத்தில் தனது மனைவியும் தயாரிப்பாளருமான ஃபாத்திமா விஜய் ஆண்டனி அவர்களின் பங்கு குறித்து மனம் திறந்து பேசினார். அப்படி பேசுகையில்

“என்னுடைய மனைவி மிகவும் பாசிட்டிவாக என்கரேஜ் பண்ணுவார். எனக்கு என ஒரு குட்டி உலகம் என் மனதுக்குள் இருக்கிறது. ஒரு ஸ்கிரிப்ட் பிடித்திருக்கிறது பிடிக்கவில்லை என்பதை தாண்டி என்னை யாரும் INFLUENCE பண்ணுகிற மாதிரி இருக்காது. என்னுடைய படம் முடிந்தவுடன் முதலில் அவரிடம் போட்டு காட்டுவேன் சொல்லப் போனால் என்னுடைய முதல் ரசிகை அவர் தான். முதல் முதலில் நான் நடிகன் ஆகிறேன் என முடிவு எடுத்தபோது என்னை முதலில் நம்பியது அவர் தான். யாருமே நம்ப மாட்டார்கள்… இன்று ஒருவேளை நிறைய படங்கள் வந்த பிறகு சிலர் நம்புவார்கள். என் மீது என் மனைவிக்கு இவர் என்ன வேண்டுமானாலும் பண்ணுவார் என ஒரு பெரிய நம்பிக்கை இருக்கிறது. ஒரு உதாரணத்திற்கு ஒரு விமானம் விபத்துக்குள்ளாகிறது என வைத்துக் கொள்ளுங்கள் என்னுடைய கணவர் உயிரோடுதான் இருப்பார் உள்ளே என சொல்லுவார். எல்லோருமே இல்லை என்றாலும் முழு விமானமும் கருகிவிட்டது என சொன்னாலும் இல்லை அவர் உயிரோடு தான் இருப்பார் என சொல்லுவார் அந்த அளவுக்கு என் மீது பெரிய நம்பிக்கை இருக்கிறது அவருக்கு… எனவே என்னை அப்படி பார்ப்பார் நான் எது செய்தாலும் நன்றாக தான் செய்வேன் எங்கிருந்தாலும் எல்லாரையும் காப்பாற்றி விடுவேன் என நினைப்பார்” என்றார். தொடர்ந்து அவரிடம் “நீங்கள் நடித்த படங்களை அவர் ரொம்ப ரசித்து பாராட்டி இருக்கிறாரா?” என கேட்டபோது, “நடித்திருக்கிறேன் என சொல்ல மாட்டார் ஒட்டுமொத்தமாகவே அவர் என்னை ரசிப்பார் பொதுவாகவே என்னை மிகவும் பிடிக்கும்” என்றார். இன்னும் பல முக்கிய விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட நடிகர் விஜய் ஆண்டனி அவர்களின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.