வித்யாசமான கதைக்களத்தில் ரசிகர்களை உற்சாகமடைய செய்து திரைப்படங்களை பீல் குட் என்ற வகையில் இயக்கி வரும் தமிழ் சினிமாவின் முன்னணி இளம் இயக்குனர் விக்னேஷ் சிவன். முதல் படமான போடா போடி திரைப்படம் தொடங்கி சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வரை இளமை ததும்பும் காட்சிகளுடன் அட்டகாசமான நகைச்சுவையையும் சேர்த்து குடும்பங்கள் கொண்டாடும் விதத்தில் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார் விக்னேஷ் சிவன். இவருடைய அடுத்த படம் பிரபல தயாரிப்பு நிறுவனம் லைகா தயாரிப்பில் அஜித் குமார் அவர்களை இயக்குவதாக தகவல் வெளியானது. பின் அந்த படத்தில் இருந்து முற்றிலும் விலகியதாக விக்னேஷ் சிவன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ரசிகர்களின் மனம் கவர்ந்த படங்களை கொடுத்து வரும் விக்னேஷ் சிவன் அடுத்த திரைப்படம் யாருடன் அமையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வந்தது. இதையடுத்து கோமாளி, லவ் டுடே போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் அவரை ஹீரோவாக நடிக்க வைத்து புதிய படம் இயக்கவுள்ளதாக தகவல் இணையத்தில் வெளியானது. பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் தானே நடித்து வெளியான லவ் டுடே திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நமது கலாட்டா தமிழ் ஏற்பாடு செய்த சிறப்பு பேட்டியில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள் கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் ஒரு சிறப்பு பிரிவாக அவரது ரசிகர்கள் நேரடியாக அவரிடம் கேள்வி கேட்கும் நிகழ்வு நடைபெற்றது.

அதில் ஒரு ரசிகர் விக்னேஷ் சிவனிடம், கதைக்காக ஹீரோவை தேடுவீர்களா? ஹீரோவிற்காக கதை எழுதுவீர்களா? என்ற கேட்டார் அதற்கு அவர், "நானும் ரௌடிதான் படத்தை எழுதும் போது விஜய் சேதுபதிக்காக எழுதவில்லை. யார் வேணும்னாலும் ஹீரோவா பண்ணலாம் அந்த மாதிரி எழுதுனேன். அதுக்கப்புறம் விஜய் சேதுபதி சார் வந்தபோது அவருக்கேற்றார் போல கதையில் சில விஷயங்கள் மாற்றினேன். எப்போதும் அதே தான் நடக்கும். சில நேரம் சில வாய்ப்பு கிடைக்கும் போது கதையில் சில வளைவு நெலிவு செய்ய வேண்டியது நல்லது" என்றார். மேலும் தொடர்ந்து விக்னேஷ் சிவன் தயாரிப்பில் எப்படி இயக்குனரை தேர்ந்தெடுப்பீர்கள்? என்ற கேள்விக்கு, "ரௌடி பிக்சர்ஸ் ல இதுவரைக்கு புதுமுக இயக்குனர்கள் தான். கமர்ஷியலா பெரிதாக வரவேற்பு கிடைக்காது என்றானாலும் கதையை அது எப்படி இருக்குனு பார்த்துட்டு தயாரிப்பேன்.

மேலும் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் கூட்டனியில் இயக்கவுள்ள புதிய படம் குறித்த கேள்விக்கு அவர், "பிரதீப் படம் அதற்கான வேலை போயிட்டு இருக்கு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததும் தெரியும்." என்றார்.

மேலும் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான பல தகவல்கள் கொண்ட முழு நேர்காணல் இதோ..