தரமான திரைப்படங்களை கொடுத்து இந்திய சினமாவை பெருமை கொள்ள வைத்து தமிழ் சினிமாவின் தரத்தை படத்திற்கு படம் உயர்த்தி வரும் இயக்குனர் வெற்றி மாறன். தமிழ் சினிமாவில் அட்டகாசமான கமர்ஷியல் படமான பொல்லதாவன் படம் மூலம் அறிமுகமாகி பின் தொடர்ந்து மக்கள் சார்ந்து வித்யாசமான கதைகளத்தில் ஆடுகளம், வடசென்னை, விசாரணை, அசுரன் ஆகிய படங்களை கொடுத்து வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றார். அதன்படி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்தார். தற்போது வெற்றிமாரன் கலைபுலி S. தாணு தயாரிப்பில் நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். அது தொடர்து மெகா ஹிட் திரைப்படமான வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கவுள்ளது. இதனிடையே வெற்றிமாறன் எழுத்தாளர் ஜெயமோகன் துணைவன் சிறுகதையை தழுவி இரண்டு பாகங்களாக இயக்கிய திரைப்படம் ‘விடுதலை’.

RS இன்ஃபோடைன்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் மற்றும் இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி ப்ரொடக்ஷன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் கதையின் நாயகனாக நடிகர் சூரியும், பெருமாள் வாத்தியார் எனும் முன்னணி கதாப்பாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன், சேத்தன் ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் விடுதலை திரைப்படத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இன்று உலகமெங்கும் விடுதலை படத்தின் முதல் பாகம் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில் படத்தில் கதாநாயகியாக நடித்த பவானி ஸ்ரீ அவர்கள் நமது கலாட்டா தமிழ் மீடியா சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டார். அதில் படம் குறித்தும் நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதியுடன் நடித்தது குறித்தும் இயக்குனர் வெற்றிமாறன் படத்தில் பணியாற்றியது குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அதில் பேசிய அவர், “எதிர்பாராம வந்த வாய்ப்பு தான் விடுதலை. நான் பணியாற்றனும்னு ஆசைபட்டா டாப் இயக்குனர்கள் பட்டியலில் வெற்றி சார் இருந்தார். எனக்கு அது கனவாக இருந்தது.அந்த வாய்ப்பு எதிர்பாராம வந்தது எனக்கு ஆச்சர்யமா இருந்தது.படத்தில் நடிக்க முன்னேற்பாடுகள் எதுவும் செய்யவில்லை. நேரடியா ஸ்பாட்டுக்கு தான் போனோம். அங்கே போய் தான் காட்சியை பற்றி சொல்வதும், வசனங்கள் கொடுப்பதும் எல்லாமே ஸ்பாட்ல தான் வெற்றி சார் சொல்வார். என்னுடைய கதாபாத்திரத்தின் அடுத்த நகர்வு என்ன என்பதே படப்பிடிப்பில் போது தான் தெரியும்.” என்றார்.

மேலும் விஜய் சேதுபதியுடன் இராண்டாவது முறை நடிக்கும் அனுபவம் குறித்து பேசுகையில்,

"சேது சார் எப்போதும் கூட நடிப்பவர்களுக்கு உறுதுணையாய் இருப்பவர். அவர் காட்சியில் எல்லோரும் தெரியனும் அவங்களோட திறமை வெளியில் தெரியனும் னு நினைப்பார். க.பெ படத்தில் ஒரு காட்சி பண்ணும் போது எனக்கு அதில் பங்கு குறைவா இருந்தது. அந்த காட்சி எனக்கானதா கொண்டு வந்தார். நடிக்கும் போது நிறைய கத்துக்கொடுப்பார்." என்றார் நடிகை பவானி ஸ்ரீ.

மேலும் பவானி ஸ்ரீ அவர்கள் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான பல தகவல்கள் கொண்ட வீடியோ இதோ..