தமிழ் சினிமா ரசிகர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பின் இடையே வெளியாக காத்திருக்கும் திரைப்படம் விடுதலை. எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்சிறுகதையை தழுவி வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் வரும் மார்ச் 31 ம் தேதி வெளியாகவுள்ளது.

RS இன்ஃபோடைன்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ள இப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைக்க படத்தில் சூரி, விஜய் சேதுபதியுடன் இணைந்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன், சேத்தன் ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இந்த மாதம் இறுதியில் வெளியாகவிருக்கும் விடுதலை முதல் பாகம் படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா கோலாகலாமாக நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் சேதுபதி, சூரி, ஒலிப்பதிவாளர் வேல்ராஜ் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் படக்குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் இயக்குனர் வெற்றிமாறன் படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். மேலும் அவரது பட்டியலில் ஏற்கனவே இருக்கும் வாடிவாசல், வடசென்னை 2 படங்கள் எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு, “விடுதலை முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் வெளியானதும் வாடிவாசல் படத்தை தொடங்குகிறோம். அதை முடித்து விட்டு ‘வடசென்னை 2’ படமாக்கப்படும்” என்றார். இது குறித்து அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 2019 ம் ஆண்டில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் வடசென்னை. வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை கதைகளத்தை சார்ந்து உருவான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. முதல் பாகத்தில் கதை முழுமையடையாமல் இரண்டாம் பாதிக்கு கதை நகர்ந்ததால் கதையின் அடுத்தகட்டம் என்ன என்ற ஆவலில் ரசிகர்கள் பல ஆண்டுகளாக இருக்க. இடையே தனுஷும் வெற்றிமாறனும் பல படங்களில் பணியாற்றி வருகின்றனர். அதனாலே அவ்வப்போது வடசென்னை 2 எப்போது என்ற கேள்வி வைரலாவது வழக்கம்.

மேலும் இதை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் இணைந்த நடிகர் சூர்யாவின் படம் ‘வாடிவாசல்’ ஜல்லிக்கட்டு கதைக்களத்தை கொண்டு உருவாக்கப்படும் இப்படத்தின் முன்னேற்பாடுகள் முன்னதாக தயார் செய்யப்பட்டு பின் சில காரணத்தினால் படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். இதனிடையே வெற்றிமாறன் விடுதலை படத்திலும் சூர்யா சிறுத்தை சிவாவின் ‘சூர்யா 42’ படத்திலும் பணியாற்றி வருகின்றனர். வாடிவாசல் தொடர்பான கேள்விகளும் அடிக்கடி வெற்றிமாறனிடம் கேட்பது வழக்கம். இதனிடையே இந்த இரண்டு படங்கள் குறித்த அப்டேட்டை இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்திருப்பதையடுத்து ரசிகர்கள் உற்சாகத்தில் அதனை கொண்டாடி வருகின்றனர்.