தளபதி விஜய் நடிப்பில் கடந்த 11 ம் தேதி உலகெங்கிலும் ‘வாரிசு’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வரும் வருகிறது. மேலும் நாளுக்கு நாள் கூட்டமும் குறையாமல் விடுமுறை நாளை வாரிசு திரைப்படம் மூலம் கொண்டாடி வருகின்றனர் ரசிகர்களும் மக்களும். உலகெங்கும் வசூல் குவித்து வரும் வாரிசு திரைப்படம் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் சங்கராந்தி விழாவை முன்னிட்டு தெலுங்கிலும் வாரசுடு என்ற பெயரில் வெளியானது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தின் வரவேற்பையடுத்து படக்குழுவினரால் சென்னையில் நன்றி தெரிவிக்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நடிகர்கள் சரத்குமார், விடிவி கணேஷ், ஷ்யாம் மற்றும் சங்கீதா இசையமைப்பாளர் தமன், பாடலாசிரியர் மற்றும் வசனகர்த்தா விவேக், தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் இயக்குனர் வம்சி பைடிபள்ளி கலந்து கொண்டனர்,

இதில் பேசிய வாரிசு பட இயக்குனர் வம்சி, “வாரிசு ஒரு படம் அல்ல. அது ஒரு நம்பிக்கை. வாரிசு படத்தை வெற்றிப் படமாக மாற்றியதற்கு தமிழ் மக்களுக்கு விஜய் சார் ரசிகர்களுக்கும் மிகவும் நன்றி. விஜய் சார் என்னை நம்பினார். அவரது நம்பிக்கையை காப்பாற்றியுள்ளேன். என்னை தெலுங்கு இயக்குநர் என்று குறுக்கி விடாதீர்கள். நான் தெலுங்கு இயக்குநரோ தமிழ் இயக்குநரோ இல்லை. நான் முதலில் மனிதன் பிறகுதான் எல்லாம். தமிழ் மக்களின் நெஞ்சில் இடம் கொடுத்ததிற்கு நன்றி எனக்கு அது போதும்..” என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன் பின் பேசிய தயாரிப்பாளர் தில் ராஜு,எங்களை நம்பி இந்த கதையை ஏற்றுக் கொண்ட விஜய் சார் க்கு நன்றிகள், சில படங்களுக்கு வசூல் கிடைக்கும் சில படங்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும் வாரிசு திரைப்படத்திற்கு இரண்டுமே கிடைத்திருக்கு. ஒரு மாதம் ஆனாலும் வாரிசு திரைப்படம் திரையரங்குகளில் ஓடும் ஏனென்றால் வாரிசு திரைப்படம் குடும்பங்களுக்கானது அனைவருக்கும் நன்றி” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தளபதி விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படம் வெளியாகி 5 நாட்களில் உலகளவில் 150 கோடி வசூலை பெற்றுள்ளது என அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு. இதனை வாரிசு பட தாயரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஷ்வரா தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது மேலும் வடஅமெரிக்காவில் 1.2 மில்லியன் டாலர் வசூலையும் UK வில் 669412 பவுண்டுகளை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து அந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் தொடர் 100 கோடி மேல் பாக்ஸ் ஆபிஸ் தக்க வைத்துள்ள தளபதி விஜயை புகழ்ந்து அவரது ரசிகர்கள் இணையத்தில் உற்சாகத்தோடு பதிவிட்டு வருகின்றனர்.