என்றென்றும் மக்களின் மனம் கவர்ந்த சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த் அவர்கள் திரைப்படங்கள் வெளியாகும் சமயத்தில் திரையரங்குகளில் திருவிழா தான். அந்த வகையில், முதல்முறையாக கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் முதல்முறையாக ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தான் ஜெயிலர். சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன் முன்னணி வேடத்தில் நடிக்கும்,ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் தரமணி & ராக்கி படங்களின் நடிகர் வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன், மிர்னா மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

மேலும் மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜெயிலர் திரைப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ஜெயிலர் படம் ரிலீஸாகவுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருந்த ஜெயிலர் திரைப்படத்தின் அதிரடியான ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று இயக்குனர் நெல்சன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருவரின் சிறப்பு அம்சங்கள் நிறைந்த பக்கா மாஸ் என்டர்டைனர் படமாக இருக்கும் என எதிர்பார்ப்புகளை ஏற்ப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற சிறப்பு நேர்காணலில், கலந்து கொண்ட பிரபல நடிகர் உதய்பானு மகேஸ்வரன் அவர்கள் ஜெயிலர் படத்தின் பல சுவாரசியமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் பேசும்போது, "இந்த கனெக்ஷன் எப்படி இருக்கிறது. நிறைய பேர் ரஜினியின் பின்னால் வருகிறார்கள் பாட்ஷா உடன் ஜெயிலரை ஒப்பிடுகிறார்கள். இதை உங்களால் ஒப்பிட முடிகிறதா?" எனக் கேட்டபோது, "எப்போதுமே தலைவர் படங்களில் நாம் எதையும் யூகிக்க முடியாது. வேற ஒரு ட்ரீட் இருக்கும் அதை நாம் யூகித்து போகாமல் சர்ப்ரைஸாக தான் ரஜினி ரசிகர்களாக தியேட்டருக்கு செல்ல வேண்டும். இந்த படத்தில் வேற ஒன்று இருக்கும் என நினைத்துப் போக வேண்டும். அதுதான் ஜெயிலரிலும் இருக்கும்." என பதிலளித்தார். தொடர்ந்து பேசிய போது, "ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஸ்பெஷலான சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக சில செய்திகள் வெளி வருகின்றன. இது பற்றி நீங்கள் ஏதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?" எனக் கேட்டபோது, "இல்லை எனக்கு அது மாதிரி எந்த செய்தியும் வரவில்லை. எனக்கு தெரியாது." என்றார். தொடர்ந்து அவரிடம், "மோகன்லால், தமன்னா அவர்களை எல்லாம் ட்ரெய்லரில் காட்டாமல் ஒழித்து வைத்திருப்பது போலவே, சிவகார்த்திகேயன் ஒழித்து வைத்திருப்பார்களா?" எனக் கேட்டபோது, “சொல்ல முடியாது…” என பதில் அளித்திருக்கிறார். இன்னும் பல சுவாரஸ்ய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட நடிகர் உதய்பானு மகேஸ்வரனின் அந்த சிறப்பு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.