தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று பிப்ரவரி 19ஆம் தேதி காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறத.பொதுமக்கள் தங்கள் வாக்குகளை செலுத்தி தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

பல திரை பிரபலங்களும் தங்கள் வாக்குகளை பதிவிட்டு தங்கள் கடமையை செய்து வருகின்றனர்.இதில் முதல் ஆளாக விஜய் நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தொடங்கியதுமே வாக்கினை பதிவு செய்துவிட்டு சென்றார்.

இவரை தொடர்ந்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன்,சூர்யா,கார்த்தி போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.இவர்களை தவிர அருண் விஜய்,விமல்,ஐஸ்வர்யா ராஜேஷ் என பல நட்சத்திரங்கள் தங்கள் வாக்குகளை செலுத்தி உள்ளனர்.

ரஜினி,சிலம்பரசன்,தனுஷ்,சிவகார்த்திகேயன் போன்ற நட்சத்திரங்கள் ஷூட்டிங் போன்ற சில காரணங்களால் வரமுடியாமல் போயுள்ளது என்று தெரிகிறது.வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெற்று வெற்றியாளர்கள் அறிவிக்கப்படவுள்ளார்கள்.

#JUST_IN : ஜனநாயக கடமையாற்றினார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன்.@ikamalhaasan#KamalHaasan #MakkalNeedhiMaiam#UrbanLocalBodyElection #TnLocalBodyElection #LocalBodyElection #localbodyelection2022 #TNElection2022 #Election2022 pic.twitter.com/IRqE6JKTlf

— Galatta Media (@galattadotcom) February 19, 2022

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது வாக்கை பதிவு செய்தார்@aishu_dil #AishwaryaRajesh pic.twitter.com/C710URn1uO

— Actor Kayal Devaraj (@kayaldevaraj) February 19, 2022