பிறந்து 2 நாளான பச்சிளம் குழந்தையைக் கொன்ற தாயையும் அவனது கள்ள காதலனையும் போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தைச் சேர்ந்த குமார் - சோலையம்மாள் தம்பதிக்கு ஏற்கனவே 4 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், சோலையம்மாள் 5 வது முறையாகக் கருவுற்று ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு, அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், குழந்தைப் பிறந்த அடுத்த 2 வது நாளே, மருத்துவர்களிடம் அனுமதி பெறாமல், யாருக்கும் தெரியாமல் குழந்தையுடன் தலைமறைவானார்.

இதனையடுத்து, சோலையம்மாளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ஆனந்தன், ஆரணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் குறித்து போலீசார் அவர்களைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இதனைத்தொடர்ந்து, சென்னையில் மறைந்திருந்த சோலையம்மாளையும், அவரது கள்ளக் காதலன் குமாரின் அண்ணன் பாபுவையும் போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில், முறையற்ற முறையில் 5 வதாக அந்த குழந்தை பிறந்ததாகவும், அதனால் அந்த குழந்தையைக் கொன்று சேவூரில் உள்ள ஒரு தரிசு நிலத்தில் புதைத்ததும் தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.