பிக்பாஸ் வீட்டின் தொன்னூற்று மூன்றாம் நாளான இன்று வெளியான இரண்டாம் ப்ரோமோவில், மஹத் மற்றும் யாஷிகா பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளனர். கடந்த சீசனில் யாஷிகா மற்றும் மஹத் கலந்துகொண்டனர் என்பது பிக்பாஸ் ரசிகர்கள் அறிந்தவையே.

கோல்டன் டிக்கெட்டை வென்று முகென் ராவ் மட்டும் இறுதிபோட்டிக்கு சென்றுள்ளார். நேற்று நடைபெற்ற செலோ டேப் கொண்ட டாஸ்கில் சாண்டி மற்றும் கவினை வீழ்த்தி முகென் ராவ் வெற்றி பெற்றார். மேலும் வீட்டில் ஒருவரை காப்பாற்ற நினைப்பவர்களுக்காக பச்சை மிளகாய் சாப்பிட்டனர் பங்கேற்பாளர்கள்.

தற்போது பிக்பாஸ் வீட்டின் புதிய அரசராக தர்ஷனை தேர்ந்தெடுத்தனர் மஹத் மற்றும் யாஷிகா. சாண்டி மற்றும் லாஸ்லியா அரசருக்கு உதவியாளராக பணிபுரிகின்றனர்.

#Day93 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/Hfc7N2kYTF

— Vijay Television (@vijaytelevision) September 24, 2019