தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் சாம்ராஜ்யத்தை கொண்ட தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர நாயகராக ஜொலிக்கும் தளபதி விஜய் அடுத்ததாக தனது 67வது திரைப்படமான லியோ திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். தனது திரைப்பயணத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தளபதி விஜயின் லியோ திரைப்படம் தற்போது தயாராகி வருகிறது. படம் தொடங்குவதற்கு முன்பு இருந்தே லியோ திரைப்படத்தின் மீது எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள் தொடங்க ஆரம்பித்தன. மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் தளபதி விஜய் உடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைவதும், கடைசியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த விக்ரம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியும் இந்த எதிர்பார்ப்புகளுக்கு காரணமாக அமைந்தன.

வாரிசு திரைப்படத்தின் ரிலீஸுக்கு சில வாரங்களுக்கு முன்பு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களிடம் தொடர்ச்சியாக தளபதி 67 படத்தின் அப்டேட்டுகள் கேட்கப்பட்ட நிலையில், அவர் தெரிவித்தபடி வாரிசு ரிலீஸுக்கு பிறகு வரிசையாக தளபதி 67 படத்தின் அறிவிப்புகள் வெளிவந்தன. அந்த வகையில் லியோ திரைப்படத்தின் அதிரடியான பிளடி ஸ்வீட் அறிவிப்பு வீடியோ கடந்த பிப்ரவரி 3ம் தேதி வெளிவந்து ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் SS.லலித் குமார் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரிக்கும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி தொடங்கப்பட்டு தொடரந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்சமயம் லியோ திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை திரிஷா கதாநாயகியாக நடிக்க, ஆக்ஷன் கிங் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்தீவ் தாமஸ் மற்றும் இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் மிஷ்கின் ஆகியோர் லியோ திரைப்படத்தில் மிக முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முன்னணி தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் தயாரிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடபல்லி இயக்கத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்த வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸானது. முதல்முறையாக தளபதி விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, SJ.சூர்யா, குஷ்பூ, ஸ்ரீகாந்த், சங்கீதா க்ரிஷ், VTV கணேஷ், சதீஷ், பிக்பாஸ் சம்யுகதா உள்ளிட்டோர் வாரிசு படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

வாரிசு திரைப்படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்ய, தமன்.S இசையமைத்துள்ளார். தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் பக்கா ஃபேமிலி என்டர்டெய்னராக அனைத்து வயது ரசிகர்களும் கொண்டாடும் திரைப்படமாக ரசிக்கப்பட்டு பிளாக்பஸ்டர் ஹிட்டாகி பாக்ஸ் ஆபீஸில் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில் தற்போது வாரிசு திரைப்படம் 50 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து லியோ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமும் வாரிசு திரைப்படத்தை வெளியிட்ட நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை அறிவித்து பதிவிட்டுள்ளது. அந்த பதிவு இதோ…