தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் சாம்ராஜ்யத்தை கொண்டு தென்னிந்திய சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகராக திகழும் தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் நேற்று முன்தினம் ஜனவரி 11-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸானது. அதே சமயத்தில் அஜித் குமாரின் துணிவு திரைப்படம் ரிலீஸாகியுள்ளது. இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

இதனிடையே தற்போது வசூல் ரீதியில் இதில் எந்த படம் முதலிடத்தை பிடித்துள்ளது என்ற போட்டியும் பேசு பொருளாகியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் வசூலில் வாரிசு திரைப்படத்தை விட துணிவு திரைப்படம் அதிகம் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளிவரும் வேளையில், UK மற்றும் அயர்லாந்தில் வாரிசு படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்திருப்பதாக UKவில் படத்தை வெளியிட்டுள்ள அஹிம்சா என்டர்டைன்மென்ட் நிறுவனம் அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வாரிசு படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்திருப்பதாக விநியோகஸ்தர் தவறான செய்திகளை பரப்பி வருவதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அஹிம்சா என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் நிறுவனர் தீபா ஐயர், இவற்றுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், “யாரெல்லாம் தவறான தகவல்களை கொடுத்ததாக சொன்னார்களோ அவர்கள் அனைவருக்கும் இரண்டு நிமிட மௌனம்” என குறிப்பிட்டு COMSCORE MOVIES UK & IRELAND-ன் புதன்கிழமை பாக்ஸ் ஆபிஸ் அறிக்கையை இணைத்துள்ளார்.

அதில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளதாக, அவதார் - தி வே ஆஃப் வாட்டர் போன்ற ஹாலிவுட் படங்கள் உட்பட புதன்கிழமை பாக்ஸ் ஆபிஸில் பிரம்மாண்ட ஓப்பனிங் பெற்ற டாப் 5 திரைப்படங்களின் பட்டியலில் வாரிசு திரைப்படம் 4வது இடத்தை பிடித்திருக்கிறது. மேலும் பட்டியலில் துணிவு திரைப்படம் இடம்பெறவே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் UK அயர்லாந்தில் தளபதி விஜயின் வாரிசு படத்திற்கு பிரம்மாண்டமான ஓப்பனிங் கிடைத்திருப்பது உறுதியாக இருப்பதால் தான் ஒரு பாக்ஸ் ஆபிஸ் கிங் என்பதை தளபதி விஜய் மீண்டும் நிரூபித்துள்ளார். அஹிம்ஸா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் அந்த அதிகாரப்பூர்வ அறிக்கை இதோ…