ஒட்டு மொத்த விஜய் ரசிகர்களும் தற்போது மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருப்பது வாரிசு திரைப்படத்தின் ரிலீஸை தான். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த முறை பொங்கலுக்கு தளபதி விஜய் மற்றும் அஜித் குமாரின் படங்களான வாரிசு மற்றும் துணிவு ஒரே தினத்தில் ரிலீஸாகவுள்ளது. இதைத் தாண்டி விஜய் ரசிகர்கள் மேலும் ஆவலோடு காத்திருப்பது தளபதி 67 படத்திற்கான அறிவிப்புகளுக்காக.

ஏனென்றால் வாரிசு திரைப்படத்தின் ரிலீஸுக்குப் பிறகு தளபதி 67 படத்தின் அறிவிப்புகள் வரும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ள நிலையில், சில தினங்களுக்கு முன்பு தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பும் தொடங்கப்பட்டுள்ளதால் இன்னும் பரபரப்பு கூடியிருக்கிறது. முன்னதாக தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜு அவர்களின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் சார்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வாரிசு திரைப்படம் தயாராகியுள்ளது.

பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தெலுங்கில் வாரிசுடு என்ற பெயரில் வெளியாகிறது.முதல்முறையாக தளபதி விஜய் உடன் இணைந்து நடிகர் ராஷ்மிகா மந்தனாக கதாநாயகியாக நடித்துள்ள வாரிசு திரைப்படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்யத் தமிழ் இசையமைத்துள்ளார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தமிழகத்தில் வெளியிடும் வாரிசு திரைப்படம் வருகிற ஜனவரி 11ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இதனிடையே நேற்று ஜனவரி 4ம் தேதி வெளிவந்த தளபதி விஜயின் வாரிசு திரைப்படத்தின் ட்ரெய்லர் பக்கா மாஸ் ஃபேமிலி என்டர்டெய்னிங் திரைப்படமாக இருக்கும் என மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் கேரளா ரிலீஸ் உரிமையை ஹரி பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கும் அட்டகாசமான அந்த அறிவிப்பு இதோ…