தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவரான தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தயாராகும் லியோ திரைப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். இதனிடையே கடந்த 2017 ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான பைரவா திரைப்படத்தில் நடித்த நடிகை அபர்ணா வினோத்திற்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

கேரள மாநிலம் கொச்சினை பூர்வீகமாக கொண்ட நடிகை அபர்ணா வினோத், இயக்குனர் பிரியநந்தனன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த ஞான் நின்னோடு கூடேயுண்டு என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர். இதனை அடுத்து இயக்குனர் வினய் கோவிந்த் இயக்கத்தில் ஆசிஃப் அலி, இந்திரஜித் சுகுமாரன், அஜு வர்கீஸ் மற்றும் செம்பன் வினோத் ஆகியோர் இணைந்து நடித்த கோஹினூர் திரைப்படத்தில் டெய்சி எனும் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகை அபர்ணா வினோத் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

பின்னர் தமிழில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த பைரவா திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் அபர்ணா வினோத் நடித்தார். அழகிய தமிழ் மகன் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் தளபதி விஜய் உடன் கைகோர்த்த இயக்குனர் பரதன் இயக்கத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து முதல் முறையாக நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்தார். ஜெகபதிபாபு வில்லனாக மிரட்ட, டேனியல் பாலாஜி, சதீஷ், தம்பி ராமையா, ஹரிஷ் உத்தமன் ஆகியோரோடு இணைந்து பைரவா திரைப்படத்தில் நடிகை அபர்ணா வினோத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து இயக்குனர் ஷரன் குமார் இயக்கத்தில், நடிகர் பரத் கதாநாயகனாக நடித்து கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்து பலரது கவனத்தையும் ஈர்த்த ஆக்சன் திரில்லர் திரைப்படமான நடுவன் திரைப்படத்தில் கதாநாயகியாக அபர்ணா வினோத் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நடிகை அபர்ணா வினோத் கேரளாவின் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த ரினில் ராஜ் என்பவரை காதலித்து வந்த நிலையில் இவர்களது காதல் அடுத்த கட்டமாக திருமணத்திற்கு நகர்ந்தது. இரு வீட்டார் சம்மதத்தோடு அபர்ணா வினோத் - ரினல் ராஜின் திருமணம் கடந்த அக்டோபர் மாதம் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் இவர்களது திருமணம் உறவினர்கள் சூழ கோலாக்கலமாக நடைபெற்று உள்ளது. நடிகை அபர்ணா வினோத்தின் திருமணத்திற்கு கலாட்டா குழுமம் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் ரசிகர்களும் பிரபலங்களும் நடிகை அபர்ணா வினோத்தின் திருமணத்திற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை அபிராமி வினோத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “எங்களது புது வாழ்க்கைக்கு உங்களது அன்பையும் ஆசீர்வாதங்களையும் வேண்டுகிறோம்.” என குறிப்பிட்டு திருமண புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வரும் நடிகை அபர்ணா வினோத்தின் திருமண புகைப்படங்கள் இதோ...