பிக்பாஸ் வீட்டில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், விஜய் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் அனைவரும் வீட்டிற்கு வந்து இன்பதிர்ச்சி தந்தனர். தாடி பாலாஜி, மா.கா.பா, பிரியங்கா, ரக்ஷன், ரியோ ஆகியோர் நுழைந்தனர். வீட்டிற்கு வந்தவர்கள் பங்கேற்பாளர்களிடம் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

பிரியங்கா சாண்டியிடம், சரியான முடிவை எடுத்தீர்கள் என்று பாராட்டி கூறுகிறார். இதை கேட்ட சாண்டி மகிழ்ச்சி மழையில் நனைகிறார். இந்த சீசன் முடிய இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், டைட்டிலை யார் வெல்வார்கள் என்ற ஆவலில் உள்ளனர் ரசிகர்கள்.

மக்களின் பிரதிநிதியான கமல் ஹாசன் இறுதி வெற்றியாளர் யார் என்பதை அறிவிப்பார். கடந்த இரு சீசன்களில் இருந்த அதே பரவச நிலை இந்த சீசனிலும் இருப்பது மகிழ்ச்சிக்குரியது.