தனக்கென தனி ஸ்டைலில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக மக்கள் மனதை வென்ற கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை தமன்னா. பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமாகி தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் கதாநாயகியாக கலக்கி வரும் நடிகை தமன்னா நடிக்கும் அடுத்தடுத்த ஒவ்வொரு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றன. அந்த வகையில் முதல் முறை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களோடு இணைந்து நடிகை தமன்னா நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாடலாக வெளிவந்த காவாலா பாடலில் அட்டகாசமாக நடனமாடி ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் கவர்ந்த நடிகை தமன்னா, ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்காக ரிலீஸ் ஆகும் போலா ஷங்கர் படத்திலும் கதாநாயகியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 படத்தில் கதாநாயகியாக நடிக்கும் தமன்னா மலையாளத்தில் பாந்த்ரா மற்றும் ஹிந்தியில் வேதா உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலில் தமன்னா ரசிகர்கள் கொண்டாட்டம் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட நடிகை தமன்னா தனது துறை பயணத்தின் பல சுவாரஸ்யமான அனுபவங்களையும் தகவல்களையும் பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் பேசும் போது, "சினிமாவில் எப்போதுமே ஒரு போட்டியில் இருந்து கொண்டே இருக்கும். இந்த போட்டி மிகவும் ஆரோக்கியமானது.. என்ன காரணம் என்றால் இங்கே ரஜினி சார் என்றால் இந்த பக்கம் கமல் சார் இந்த பக்கம் அஜித் சார் என்றால் அந்த பக்கம் விஜய் சார் அப்படி பார்க்கும்போது தமன்னாவிற்கு யார் போட்டி? இன்று நீங்கள் நினைக்கிறீர்கள்.." என்று கேட்டபோது, “எனக்கு புதிதாக வரும் எல்லோருமே போட்டி தான். நான் நடிக்க வந்து 18 ஆண்டுகள் ஆகிவிட்டது. 60ஓ 70ஓ 80ஓ கடவுள் என்னை எப்போது மேலே அழைத்துச் செல்கிறாரோ அதுவரை வேலை செய்து கொண்டிருப்பேன்.” என பதில் அளித்தார்.

தொடர்ந்து அவரிடம், “இல்லை உங்களை சுற்றி பேசப்படும் அல்லவா அப்படி உங்களுக்கு போட்டியாக அதிகம் பேசப்படுகிறவர் யார்?” என்று கேட்டபோது, “ஆமாம் ஆமாம் 18 ஆண்டுகள் ஆகிவிட்டது ஒவ்வொரு இரண்டு மூன்று வருடங்களுக்கும் ஒவ்வொரு புது பெயர்களை கேட்டுக் கொண்டிருக்கிறேன். அந்த பெயர் வரும் போகும் எங்கேயோ இருக்கும் நான் போய்க்கொண்டே இருப்பேன் நான் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையும் ஒரு புது பெயர் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.” என பதில் அளித்தார். மீண்டும் அவரிடம், “ஒருபுறம் உங்களுடைய பெயர் அப்படியே இருக்கிறது மறுபுறம் தொடர்ந்து பெயர்கள் மாறிக்கொண்டே இருக்கிறது. அப்படியாக அதிக முறை யாருடைய பெயர் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது அவருடன் நீங்கள் நெருங்கிய நண்பராக கூட இருக்கலாம்.” எனக் கேட்டபோது, “அது உங்களுக்கு தான் தெரியும் அதில் நான் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. நான் என்னுடைய கடைசி படமே பார்க்க மாட்டேன் இதில் எதை எதிர்பார்ப்பது…” என தமன்னா பதிலளித்துள்ளார். இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்ட நடிகை தமன்னாவின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.