சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் காப்பான்.இந்த படம் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ஓடி வருகிறது.இதனை தொடர்ந்து இவரது சூரரை போற்று திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

ஒரு நடிகர் என்பதை தாண்டி நடிப்பதோடு மட்டுமில்லாமல் தனது அகரம் foundatiton மூலம் பல மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார்.இது மட்டுமின்றி பல தரப்பினருக்கும் தன்னால் முடிந்தளவு உதவிகளை அவ்வப்போது செய்து வருகிறார்.

தற்போது இயக்குனர்கள் சங்க அறக்கட்டளைக்கு 10 லட்சம் ருபாய் வழங்கியுள்ளார்.இந்த காசோலையை அறக்கட்டளையின் தலைவரும் பிரபல இயக்குனருமான ஆர்.வி.உதயகுமாரிடம் சூர்யா வழங்கியுள்ளார்.இதனை பலரும் பாராட்டி வருகின்றனர்


.