தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசராமல் நடித்து சிகரம் தொட்ட சில நடிகர்களில் ஒருவர் சூர்யா.இவர் கடைசியாக நடித்திருந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மார்ச் 10ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது.

2020-ல் சுதா கொங்கரரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் சூரரைப் போற்று.கொரோனா தொற்று காரணமாக திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது.அபர்ணா பாலமுரளி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

சூர்யாவின் 2D என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.ஜீ வி பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.படம் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்தது.

68ஆவது தேசிய திரைப்பட விருதுகள் சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.இதில் சிறந்த நடிகர்,சிறந்த நடிகை,சிறந்த படம்,சிறந்த திரைக்கதை,சிறந்த பின்னணி இசை உள்ளிட்ட 5 பிரிவுகளில் விருதுகளை அள்ளியுள்ளது.சிறந்த நடிகருக்கான சூர்யா பெற்றிருந்தார்.விருது வழங்கும் விழா நேற்று மும்பையில் நடைபெற்றது.இதில் ஜனாதிபதி திரௌபதி முர்மு கையில் இருந்து பெற்றுக்கொண்டார்

தேசிய விருது பெற்றுக்கொண்டது குறித்து சூர்யா தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் விருது வென்றது மிகவும் மகிழ்ச்சி,இயக்குனர் மற்றும் படக்குழுவுக்கு நன்றி.இது மிகப்பெரிய கெளரவம்விருது வென்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் இந்த விருது ரசிகர்களுக்கு இந்த விருது சமர்ப்பணம் என சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.சூர்யாவிற்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Ever grateful Sudha! Hearty congratulations to all the winners. This one’s for you Anbana fans!! #SooraraiPottru #NationalFilmAwards pic.twitter.com/ysPCCPakAa

— Suriya Sivakumar (@Suriya_offl) October 1, 2022