வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திற்கு பிறகு STR , ஹன்சிகா நடிக்கும் மகா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து STR 45 படத்திலும் நடித்து வந்தார்.வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவிருக்கும் மாநாடு படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.

மகா படத்திலிருந்து இவரது லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.சமீபத்தில் சபரிமலை சென்று திரும்பிய இவர் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.நோ மோர் சிங்கிளு வரா வரா ஏஞ்சலு என்ற ஆல்பம் பாடல் ஒன்றை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த பாடல் பிப்ரவரியில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இவரது பிறந்தநாளான 3ஆம் தேதி வெளியாகுமா இல்லை காதலர் தின்னதன்று வெளியாகுமா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.