நகைச்சுவை நடிகராக மக்களின் மனம் கவர்ந்த சூரி தற்போது தேர்ந்த நடிகராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். முதல் முறையாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தில் கதையின் நாயகனாக களமிறங்கி இருக்கும் நடிகர் சூரி, தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்துள்ளார். வழக்கம்போல் மேலும் ஒரு ஆகச் சிறந்த படைப்பை கொடுத்திருக்கும் இயக்குனர் வெற்றிமாறன் இந்த முறை விடுதலை திரைப்படத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறார் என்று நான் சொல்ல வேண்டும்.

இதனிடையே நமது கலாட்டா தமிழ் சேனலில் சூரி ரசிகர்கள் கொண்டாட்டம் சிறப்பு நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட நடிகர் சூரி அவர்கள் பல சுவாரஸ்யமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், அவரது மலரும் நினைவுகளாக இருக்கும் சில தருணங்களின் புகைப்படங்கள் குறித்து தொடர்ந்து பேசி வந்த நடிகர் சூரி அவர்கள், “வேதாளம் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் அஜித் குமார் அவர்களோடு தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம்” பற்றிய சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்படி பேசுகையில், “மறக்க முடியாத ஒரு புகைப்படம் வேதாளம் திரைப்படத்தில் நடிக்கும் போது... படத்தில் நடிக்கும் போது என்னுடைய பிறந்தநாள் வந்தது. என்னுடைய பிறந்தநாளுக்கு என்னுடைய மனைவி இதுவரை என்னிடம் எதுவும் கேட்டது கூட கிடையாது... நானும் யாருடனும் சென்று அதிகமாக போட்டோ எடுத்தது கிடையாது. கொஞ்சம் தயங்குவேன். மனைவியும் கேட்டதே இல்லை, ஆனால் இந்த பிறந்தநாள் அன்று எனது தம்பிகள் கேட்டார்கள்... அவர்கள் அஜித் சாரின் பயங்கரமான ரசிகர்கள். அவர்கள் அஜித் சாரோடு ஒரு போட்டோ எடுக்க வேண்டும் என கேட்டனர். நீதான் அவரோடு சேர்ந்து நடிக்கிறாயா அல்லவா? எப்படியாவது ஏற்பாடு செய் என கேட்கவும் எனக்கு தயக்கமாகவும் இருந்தது. நல்ல மனிதர் நன்றாக பேசுகிறார். நான் போய் கேட்டு தர்ம சங்கடத்தை கொடுத்து விடக்கூடாது என கேட்காமலே இருந்தேன். பிறந்தநாளுக்கு முந்தைய நாள் வரை என்னுடைய தம்பி ஆதி கேட்டாச்சா இல்லையா என தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டே இருந்தார். மிகவும் யோசித்துக் கொண்டே இருந்தேன் கடைசியாக மேக்கப் மேன் சக்தி அவர்களிடம் சொன்னேன்.. இந்த மாதிரி தம்பி, என் மனைவி எல்லாரும் வர வேண்டும் என நினைக்கிறார்கள் சார் எதாவது நினைத்துக் கொள்வாரா என்ன கேட்டதற்கு அதெல்லாம் ஒன்றும் நினைக்க மாட்டார் இருங்கள் நான் கேட்டு சொல்கிறேன் என்று அப்போதே சொல்லிவிட்டார். பார்க்கலாம் என்று சொல்லிவிட்டார். என சொன்னதும் எனக்கு பயங்கர சந்தோஷமாகிவிட்டது. உடனே குடும்பம் மொத்தமும் வந்துவிட்டனர். ஏவிஎம் ஸ்டுடியோவில் ஒரு கேரவன்குள் சென்று பார்த்தோம். இதில் மறக்க முடியாத விஷயம் என்னவென்றால், சார் போட்டிருக்கும் அந்த கண்ணாடி, அதை எனது பையன் சார்வான் எல்லோரும் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் கீழே போட்டு மிதித்துவிட்டான். உடனடியாக எனது பையனை பிடித்து மனைவி இழுத்து விட்டு, “சாரி சார்” என்றார். கண்ணாடிக்கு ஒன்றும் ஆகவில்லை. மேலும் “சாரி சார் அவன் குழந்தை சார்” என நாங்கள் சொன்னதும், “அதை செய்தால் தான் அவன் குழந்தை இல்லையென்றால் அது குழந்தையே அல்ல” என அஜித் சார் பதிலளித்தார். இந்த நிகழ்வை என் வாழ்க்கையில் நான் மறக்கவே முடியாது. என சூரி தெரிவித்துள்ளார்.அந்த சிறப்பு பேட்டி இதோ…