சம கால தமிழ் சினிமாவில் தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். முதல் படத்திலிருந்து மக்களின் கவனம் பெற்ற சிவகார்த்திகேயன் தனக்கென்ற ஒரு தனி ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார். தொடர் வெற்றி திரைப்படங்களை கொடுத்து இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநயாகனாக தனித்து தெரிகிறார். தொடர்ந்து சிவகார்த்திகேயன் பல படங்களில் நடித்து வருகிறார். அதன்படி மாவீரன், அயலான் மற்றும் கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் என்று வரிசை கட்டி திரைப்படங்கள் அவரது கையில் உள்ளன. தனது ரசிகர்களுக்காக பக்கா விருந்தை கொடுக்க சிவகார்த்திகேயன் எந்த வகையில் சலித்து கொண்டதில்லை. அயராமல் உழைத்து ரசிகர்களை உற்சாகப் படுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன்.

அதன்படி சிவகார்த்திகேயன் தற்போது மண்டேலா இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவருடைய முந்தைய திரைப்படமான ‘பிரின்ஸ்’ எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. அதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மாவீரன் திரைப்படத்தில் பெரும் எதிர்பார்ப்பு வைத்துள்ளனர். சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மாவீரன் திரைப்படம் கிட்டத்தட்ட இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனது 38 வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அதன்படி அவரது ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். மேலும் தற்போது சிவகார்த்திகேயன் ஷாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் மண்டேலா இயக்குனர் மடோன் அஷ்வின் நடித்து வரும் ‘மாவீரன்’ திரைப்படத்தின் குழுவினருடன் சிவகார்த்திகேயன் தன் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். இதுகுறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் நேற்றிலிருந்து இப்போது வரை இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் மாவீரன் திரைப்படத்திலிருந்து ஒரு பாடலையும் வெளியிட்டுள்ளனர் படக்குழு. அதன் படி பரத் சங்கர் இசையில் அனிரூத் பாடிய ‘Scene ah Scene ah’ பாடல் இணையத்தில் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இன்று சிவகார்த்திகேயன் குடும்பத்தினருடன் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இவர்களுடன் நடிகரும் குக் வித் கோமாளி புகழ் தர்ஷன் கலந்து கொண்டார். வழிபாடு முடித்து வெளியில் வந்த சிவகார்த்திகேயனை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு செல்பி எடுத்துக் கொண்டனர். கூட்ட நெரிசல் சிறிது நேரம் அதிகமானதால் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.