மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க தயாராகி வரும் திரைப்படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பு குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. விஜய் தொலைக்காட்சியின் மூலம் தமிழ் மக்களுக்கு மிக நெருக்கமான பிரபலமாக வளர்ந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்கள் ஒருவராக இடம் பிடித்து இருப்பவர் சிவகார்த்திகேயன். ஆரம்ப முதலே தனது ஒவ்வொரு படங்களையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ரசிக்கும் படியாக நல்ல என்டர்டெயினிங் படங்களை சிவகார்த்திகேயன் கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த மாவீரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று 89 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. முன்னதாக இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் R.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ஏலியன் சயின்ஸ் பிக்சன் திரைப்படமான அயலான் திரைப்படம் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. வருகிற தீபாவளி வெளியீடாக அயலான் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அடுத்ததாக இந்திய சினிமாவின் நட்சத்திர இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களுடன் சிவகார்த்திகேயன் இணைய இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் SK21 திரைப்படத்தில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். ரங்கூன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் SK21 திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்த SK21 திரைப்படத்திற்காக தற்போது மிரட்டலான புதிய லுக்கிற்கு சிவகார்த்திகேயன் தனது உடலை ட்ரான்ஸ்பர்மேஷன் செய்திருக்கிறார். குறிப்பாக சிவகார்த்திகேயன் முதல் முறை தனது படத்திற்காக சிக்ஸ் பேக் முயற்சி செய்திருப்பதாகவும் அந்த லுக் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் என்றும் தற்போது செய்திகள் பரவி வருகின்றன. சிவகார்த்திகேயனின் அந்த மிரட்டலான லுக்கில் விரைவில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவரும் என்றும் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.கடந்த சில வாரங்களாகவே திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பாக காஷ்மீரில் கடந்த 75 நாட்களாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்து இருப்பதாக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “அடுத்த முறை வரும் வரை எங்களை வளர்த்த இந்த காஷ்மீருக்கு நன்றி... 75 நாட்களாக நடைபெற்ற இந்த படப்பிடிப்பு நம்ப முடியாததாக இருக்கிறது. இடைவிடாது உழைத்த தொழில் நுட்பக் குழுவினர் & நடிகர் நடிகைகள்… உறுதுணையாக நின்ற காஷ்மீர் காவல் துறையினர் ராணுவத்துறையினர்... உலக நாயகன் கமல்ஹாசன் சார் எங்கள் ஹீரோ சிவகார்த்திகேயன் சார் மற்றும் தயாரிப்பாளர்கள் மகேந்திரன் சார் லடா குருதேன் சிங் மற்றும் டிஸ்னி நீங்கள் தான் இதை நிஜமாக்கி இருக்கிறீர்கள்.” எனக் குறிப்பிட்டு படப்பிடிப்பு தளத்திலிருந்து முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த கொண்டாட்டத்தின் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் இதோ...