தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.தற்போது இவர் இரும்புத்திரை இயக்குனர் PS மித்ரனுடன் இணைந்து ஹீரோ படத்தில் பணியாற்றி வருகிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

KJR ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.கல்யாணி ப்ரியதர்ஷன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.பாலிவுட் ஹீரோ அபாய் தியோல்,ஆக்ஷன் கிங் அர்ஜுன்,இவானா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படத்தின் Firstlook வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்ததது.

இந்த படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தின் வில்லனும் பிரபல பாலிவுட் ஹீரோவுமான அபாய் தியோல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

எல்லா வில்லனுக்கும் ஒரு ஹீரோ தேவை,இந்த படத்தின் திறமையான ஹீரோ சிவகார்த்திகேயனுடன் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி.இயக்குனர் மித்ரன் மற்றும் குழுவினருடன் இது ஒரு ஜாலியான அனுபவம்.தமிழ் கற்பது ஒன்று தான் கடினமாக உள்ளது என்றாலும் ஹீரோ படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று பதிவிட்டுள்ளார்.