தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.தற்போது இவர் இரும்புத்திரை இயக்குனர் PS மித்ரனுடன் இணைந்து ஹீரோ படத்தில் பணியாற்றி வருகிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.



KJR ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.கல்யாணி ப்ரியதர்ஷன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.பாலிவுட் ஹீரோ அபாய் தியோல்,ஆக்ஷன் கிங் அர்ஜுன்,இவானா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்த படத்தின் டீஸர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.சில காரணங்களால்இந்த படத்தின் ரிலீசுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது.



இதுகுறித்து பதிவிட்ட படத்தின் தயாரிப்பாளரான கே.ஜே.ஆர் நிறுவனம் எங்கு திரும்பினாலும் தங்கள் படத்தை பற்றிய பேச்சுதான் அதற்கு உதவியாக இருந்தவர்களுக்கு நன்றி என்று பதிவிட்டிருந்தனர்.படம் திட்டமிட்டபடி டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளனர்

#HERO - TV, Radio, News - enga thirumbunaalum namma news thaan! Thanks for the free promotions 🔥 Namakku fans ellaa pakkamum irukkanga pola! 😄
To our fans - don't worry bha! Padam confirm December 20 varudhu! 🎉 pic.twitter.com/ljFDJwcntJ

— KJR Studios (@kjr_studios) November 14, 2019

All the hard work we've been putting into #Hero is to bring you a film that is socially responsible & a good entertainer. We've been working day & night to do that. Any claim that this film belongs to anyone else but us & you - the fans; is false! #HeroFromDec20 as per plan! 💪 pic.twitter.com/jMG72UxTOr

— KJR Studios (@kjr_studios) November 14, 2019