உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஜூன் 3ஆம் தேதி பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.பெரிய எதிர்பார்ப்புக்கிடையே இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.ராஜ்கமல் பிலிம்ஸ் இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.

இந்த படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.கமல் போன்ற ஒரு மகாநடிகனுடன் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மற்றும் ஃபஹத் பாசில் முக்கிய வேடங்களில் போட்டி போட்டு நடித்துள்ளனர்.மூன்று பெரிய நடிகர்கள் இணைந்து நடிப்பது படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.இவர்களுடன் சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடித்துள்ளார்.

ஆங்கில படங்களை போல பல கைதி மற்றும் விக்ரம் படங்களின் கதைக்களம் இணைவது போல படமாக்கியுள்ளார் லோகேஷ்.பலரும் இந்த படத்தினை பாராட்டி வருகின்றனர்.இந்த படம் குறித்து தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

படம் மிரட்டலாக உள்ளது,கமலின் ஸ்டைல்,லோகேஷின் மேக்கிங்,அனிருத்தின் இசை,விஜய்சேதுபதி மற்றும் பஹத்தின் நடிப்பு அத்துடன் சூர்யாவின் சிறப்பு தோற்றம் என அனைத்தும் சேர்ந்து ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக படம் அமைந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.பெரிய வெற்றிக்காக படக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

#Vikram Total blast💥💥@ikamalhaasan sir swag @Dir_Lokesh making @anirudhofficial music @anbariv terrific stunts #FaFa @VijaySethuOffl performances @Suriya_offl sir surprise-all made it an amazing ride 🔥Congrats to entire team, @rkfi @turmericmediaTM on the massive success❤️❤️👍

— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) June 7, 2022