உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் மகளான நடிகை ஸ்ருதிஹாசன், கமல்ஹாசன் இயக்கத்தில் வெளிவந்த ஹேராம் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நட்சத்திர நாயகியாக வலம் வரும் நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் கடைசியாக இந்த 2023 ஆம் ஆண்டில் ஒரே சமயத்தில் இரண்டு திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின. கடந்த ஜனவரி மாதம் சங்கராந்தி வெளியீடாக தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திரம் நடிகர்களான நண்டாமுரி பாலகிருஷ்ணா மற்றும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஆகியோர் நடிப்பில் பக்கா மாஸ் திரைப்படங்களாக வெளிவந்த வீரசிம்ம ரெட்டி மற்றும் வால்டர் வீரய்யா ஆகிய திரைப்படங்கள் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின.

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த அட்டகாசமான திரைப்படங்கள் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளிவர தயாராகிய வருகின்றன. அந்த வகையில் தற்போது முதல்முறையாக ஹாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் நடிகை ஸ்ருதிஹாசன் THE EYE எனும் ஆங்கில திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முன்னதாக கே ஜி எஃப் படங்களின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் மற்றும் ஒரு பிரம்மாண்ட படைப்பாக தற்போது தயாராகி வரும் சலார் திரைப்படத்தில் நடிகர் பிரபாஸ் உடன் இணைந்து கதாநாயகியாக ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடைய நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்த நடிகை ஸ்ருதிஹாசன் நம்மோடு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் தனது பெற்றோர்களான உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சரிகா குறித்து மனம் திறந்து பேசினார். அப்படி பேசுகையில், “நான் என்னுடைய பெற்றோர்களுக்கு பிறந்ததற்கு மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். அவர்கள் பிரபலங்கள் மற்றும் புகழ் மிக்கவர்கள் என்பதற்காக மட்டுமல்ல... அவர்கள் இருவரும் பறந்த மனமுடையவர்கள் முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள் மிகவும் சுதந்திர மனப்பான்மை கொண்டவர்கள் இந்த அம்சங்கள் கொண்டு என்னையும் அக்ஷராவையும் வளர்த்து இருக்கிறார்கள். முன்னர் பேசிக்கொண்டிருந்த போது சொன்னது போல் இந்தப் பெண்கள் இதை செய்யக்கூடாது அதை செய்யக்கூடாது என்ற மாதிரியான பேச்சுகளை அப்பா பேசியதே கிடையாது. அம்மாவும் அப்படி சொன்னதே கிடையாது. நீ ஒரு பெண் உன்னால் இதை செய்ய முடியாது என அவர்கள் சொன்னதில்லை. என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாயோ அதற்கான கடின உழைப்பை செய்துவிட்டு உன்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செய் என்று தான் சொல்வார். அந்தப் பெண் என்ற பேச்செல்லாம் இந்த சமூகம் தான் வெளியில் இருந்து என்னிடம் சொன்னது. என் வீடு மிகவும் கலைத்துவமானது மிகவும் சுதந்திரமானது நிறைய உரையாடல்கள் இருக்கும் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எப்போதும் குழந்தைகள் தாங்கள் என்ன புரிகிறது, என்று நினைத்து பேசுவதில்லை. அவர்கள் பேசுகிறார்கள் பின்னர் வளர்கிறார்கள்.” என ஸ்ருதிஹாசன் பதிலளித்துள்ளார். இன்னும் பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்ட ஸ்ருதிஹாசனின் அந்த முழு பேட்டி இதோ…