தமிழ் சினிமாவில் காலம் காலமாக தொடரும் மக்கள் திலகம் எம்ஜிஆர் - நடிகர் திலகம் சிவாஜி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - உலக நாயகன் கமல்ஹாசன் என்ற நட்சத்திர வரிசையில் அடுத்த கட்டத்தில் நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்கள் தளபதி விஜய் மற்றும் அஜித் குமார். தென்னிந்திய திரை உலகில் பல கோடி ரசிகர்கள் சாம்ராஜியத்தை கொண்ட இவர்களின் திரைப்படங்கள் வரும் தினங்களில் திரையரங்குகளில் திருவிழா தான்.

அதுவும் இருவரின் படங்களும் ஒரே தினத்தில் வெளியானால் இன்னும் கொண்டாட்டம் தான். இந்த முறை பொங்கல் வெளியீடாக தளபதி விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்குமாரின் துணிவு திரைப்படமும் வருகிற ஜனவரி 11ம் தேதி ரிலீஸ் ஆவதால் தற்போது கொண்டாட்டங்கள் உச்சகட்டத்தை எட்டி இருக்கின்றன. ஜில்லா - வீரம் ஆகிய படங்களில் ரிலீசுக்கு பிறகு 8 ஆண்டுகளுக்கு பின் பொங்கல் வெளியீடாக வாரிசு - துணிவு படங்கள் வருகின்றன.

இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி இருக்கும் வாரிசு திரைப்படத்தையும் மூன்றாவது முறையாக இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள துணிவு படத்தையும் இந்த பொங்கலில் தீபாவளியாக கொண்ட ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதனிடையே சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் ஷாம் தான் துணிவு படத்தில் வில்லனாக நடிக்க இருந்ததாக தெரிவித்துள்ளார். முன்னதாக வாரிசு திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் ஷாம் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசும்போது, “அஜித் சார் உடன் ஒரு வாய்ப்பு கைவிட்டு போனது துணிவு திரைப்படத்தில் நான் வில்லனாக நடித்திருக்க வேண்டும். இயக்குனர் H.வினோத் என்னை அழைத்துச் சொன்னார். நான் மிகவும் உற்சாகமடைந்தேன். ஆனால் தளபதி 66 (வாரிசு) படத்திற்கும் அடவான்ஸ் வாங்கி அந்த ஆறு மாதங்களில் தேதிகள் இப்படி இருக்க வேண்டும் என வைத்திருந்தால் தவிர்க்க முடியவில்லை. நான் H.வினோத் சாரிடம் ஒரு மாதம் இரண்டு மாதம் பார்க்க முடியுமா என கோரிக்கை வைத்துப் பார்த்தேன். ஆனால் H.வினோத் சார் சொன்னது, “பரவால்ல ஷாம் சார் இது சூழ்நிலை தான் எதிர்காலத்தில் நாம் சேர்ந்து பணியாற்றுவோம்” என சொல்லி இருக்கிறார். எனவே கட்டாயமாக விரைவில் அஜித் சாருடன் இணைந்து பணியாற்றுவேன்” என நடிகர் ஷாம் தெரிவித்துள்ளார். மேலும் பல சுவாரசியமான கேள்விகளுக்கு பதிலளித்த நடிகர் ஷாமின் அந்த முழு பேட்டி இதோ…