சன் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்றான கேளடி கண்மணி சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை திவ்யா கணேஷ். இதனை அடுத்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லட்சுமி வந்தாச்சு மற்றும் சுமங்கலி ஆகிய சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்த நடிகை திவ்யா கணேஷ் விஜய் தொலைக்காட்சியின் MOST FAVORITE சீரியலாக ரசிகர்களால் தற்போது கொண்டாடப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி எனும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே மிக பிரபலமடைந்தார். மேலும் விஜய் டிவியின் செல்லமா சீரியலிலும் வில்லியாக முன்னணி கதாபாத்திரத்தில் நடிகை திவ்யா கணேஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற திவ்யா கணேஷ் FANS MEET நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை திவ்யா கணேஷ் ரசிகர்களோடு கலந்துரையாடினார். மேலும் ரசிகர்களின் கேள்விகளுக்கும் சிறப்பாக பதில் அளித்தார். அந்த வகையில், “இதுவரை எந்த விஷயத்திற்கு நீங்கள் மிகவும் கோபமடைந்து இருக்கிறீர்கள்?” எனக் கேட்ட போது,

என தெரிவித்துள்ளார். இன்னும் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்ட நடிகை திவ்யா லட்சுமியின் அந்த முழு பேட்டி இதோ…