தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர் தனுஷ்.நடிப்பதில் மட்டுமின்றி தயாரிப்பு,இயக்கம்,பாடலாசிரியர் என பல பரிமாணங்களை எடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் D40 படத்தில் நடித்து வருகிறார்.இதனை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.தற்போது இந்த படத்தின் இசையமைக்கும் வேலைகளை தொடங்கிவிட்டதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதனை அடுத்து தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Had the honour of commencing the song production of dear @mari_selvaraj’s @dhanushkraja sir’s movie with some amazing folk artists from South Tamil Nadu.Thank you @theVcreations Thanu sir,my sound team and all !

— Santhosh Narayanan (@Music_Santhosh) November 6, 2019