தமிழ் சினிமாவில் குறிப்பிடப்படும் நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் சந்தானம். ஒரு காலக் கட்டத்தில் முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நகைச்சுவை நடிகனாய் நடித்து கோலிவுட்டின் ஆஸ்தான நகைச்சுவை நடிகராய் வலம் வந்த சந்தானம் பின் ஹீரோவாக திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். அதன்படி தில்லுக்கு துட்டு 1,2, A1, ‘பாரிஸ் ஜெயராஜ்’, ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ ஆகிய திரைப்படங்கள் ஹீரோவாக சந்தானம் நடித்ததில் முக்கியமான படமாக அமைந்தது. தற்போது சந்தானம் ஹீரோவாக வடகுபட்டி ராமசாமி, கிக் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதனிடையே இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடித்து கடந்த ஜூலை 28ம் தேதி வெளியான திரைப்படம் ‘டிடி ரிட்டன்ஸ்’. ஹாரர் காமெடி திரைப்படமாக உருவான இப்படத்திற்கு ரசிகர்கள் தங்கள் ஆதரவை அளித்து தற்போது டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் நடிகர் சந்தானம் அவர்கள் கலந்து கொண்டு தனது திரை அனுபவம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் லிங்கா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடித்தது குறித்து பேசுகையில், “லிங்கா நடிக்கும் போது ரஜினி சார் சொன்னாரு.. நண்பேன்டா வசனம் பயங்கர பிரபலம் அதனால் அதை சொல்லுங்கனு சொன்னார். நான் எப்படி சார் நண்பேன்டா னு கேட்டேன். அதுக்கு அவர் சரி நீ நண்பேன் னு சொல்ல டா னு நான் சொல்லிக்குறேன்னு சொன்னார்.” என்றார் நடிகர் சந்தானம்.

அதை தொடர்ந்து சந்தானம் திரைப்பயணத்தில் மறக்க முடியாத தருணமாகவும் ரசிகர்களால் அதிகம் பேசப்படும் நிகழ்வாக அமைந்த நடிகர் அஜித் குமாருடனான நேர்காணல் குறித்து கேட்கையில், "அஜித் சார் யாருக்கும் பேட்டி கொடுக்கல. ஒரு பேட்டினு வரும்போது தொகுப்பாளரா என் பேரை பரிந்துரைத்தார்.. சில கேள்விகள் அவரிடம் கேட்கலமானு கேட்டேன். இல்ல உனக்கு என்ன தோனுதோ அங்கயே கேளு.. நான் அப்படியே போயிக்குறேன் னு சொல்லிட்டாங்க..

சில கேள்விகள் தப்பாயிடுமோனு பயந்தேன்.. பைக் ஓட்றதை பத்தி அவரிடம் ஒரு கேள்வி கேட்டேன்.அது தயக்கத்துடன் தான் கேட்டேன். ஆனா அவர் அதுக்கு சாதரணமா பதில் சொன்னார்." என்றார் நடிகர் சந்தானம்.

மேலும் நடிகர் சந்தானம் அவர்கள் டிடி ரிட்டன்ஸ் படம் குறித்து சுவாரஸ்யமான தகவல்களை நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் பகிர்ந்த வீடியோ உள்ளே..