பிக்பாஸ் வீட்டின் தொன்னூற்று ஆறாம் நாளான இன்று வெளியான இரண்டாம் ப்ரோமோவில், கவினை பிரிந்து வாடுவதாக சாண்டி கூறுகிறார். அருகில் இருக்கும் ஷெரின் லாஸ்லியா கவலையில் கலங்குகின்றனர். லாஸ்லியாவிற்கு அறிவுரை கூறிவிட்டு கவின் ஐந்து லட்சம் பணத்தை எடுத்து கொண்டு வீட்டை விட்டு நேற்று வெளியேறினார்.

போட்டிக்கு பிறகு வெளியே வந்தவுடன் கவினை கவனித்துகொள்வதாக கூறுகிறார் சாண்டி. கண்ணீர் கடலில் தவிக்கும் லாஸ்லியாவிற்கு இனி ஆறுதல் அவரது டாஸ்க் கவனமே. இன்னும் ஒரு வாரமே உள்ளதால் யார் டைட்டிலை பெறுவார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்த வாரம் ஷெரின் தான் வெளியேறுவார் என்று கூறப்படுகிறது. பதினாறு பேரில் நான்கு பேர் மட்டும் தான் இறுதி போட்டிக்கு நான்கு பேர் மட்டும் நுழைவார்கள்.