பிக்பாஸ் தொடரின் மூன்றாவது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த நிகழ்ச்சியில் பரபரப்பான திருப்பாங்கள் ஏற்பட்டு வருகின்றன.கவின் கடந்த வாரம் ஐந்து லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினார்.

யாரும் எதிர்பாராத விதமாக தர்ஷன் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.இதனை தொடர்ந்து இந்த சீசனில் முதலில் வெளியேறிய பாத்திமா,மீரா மிதுன்,ரேஷ்மா,ஆனந்த் வைத்யா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக வந்துள்ளனர்.

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் மீரா மிதுன் தியானம் செய்துகொண்டிருக்கிறார்.அதனை பார்த்த சாண்டி அவரைப்போல செய்துகாட்டி கொண்டிருக்கிறார், சிறிதுநேரம் கழித்து முகெனும் இவருடன் சேர்ந்து கொண்டு மீரா மிதுனை கலாய்க்கின்றனர்.