பிக்பாஸ் வீட்டில் இன்று வெளியான மூன்றாம் ப்ரோமோவில், விஜய் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் அனைவரும் வீட்டிற்கு வந்து இன்பதிர்ச்சி தந்தனர். தாடி பாலாஜி, மா.கா.பா, பிரியங்கா, ரக்ஷன், ரியோ ஆகியோர் நுழைந்தனர்.

வீட்டிற்கு வந்தவர்கள் பங்கேற்பாளர்களிடம் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். வீட்டில் தனது அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டார் சாண்டி.

என்னுடைய கேரக்டர் இதுதானா என்று நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். வெளியே ஒரு முகம் வீட்டில் வேறொரு முகம் என்று பிரித்து பார்க்க இயலும் என்பதை கூறுகிறார் சாண்டி. மேலும் சண்டை வரும் போது தூரமாக சென்று எஸ்கேப் ஆயிடுவேன் என்று வெளிப்படையாக கூறுகிறார்.