பிக்பாஸ் வீட்டில் இன்று வெளியான மூன்றாம் ப்ரோமோவில், பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெறுகிறது. இதில் இறுதி போட்டியாளர்களான சாண்டி, ஷெரின், லாஸ்லியா மற்றும் முகென் பிரஸ் மீட்டில் அமர்ந்து கொண்டு உரையாடுகின்றனர். அப்போது சாண்டி அவர்களிடம் கேள்வி எழுப்பிய போது, அதற்கு அழகாக விடையளித்தார்.

இதை திட்டம் என்று எடுத்துக்கொண்டாலும் ஒன்றுமில்லை. இதுதான் என் குணாதிசயம் என்று போட்டுடைத்தார். இதே போல் லாஸ்லியா, முகென், ஷெரின் போன்ற இறுதி போட்டியாளர்களிடம் கேள்விகள் கேட்கப்படலாம்.

இதுவும் ஒரு டாஸ்க்கா என்பது பிக்பாஸிற்கு மட்டுமே தெரியும். இறுதியில் யார் இந்த சீசனின் வெற்றியாளர் என்பதை இன்னும் சில நாட்களில் தெரியவரும்.