தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் சமந்தா.தனது நடிப்பாலும் அழகாலும் பல ரசிகர்களை பெற்றிருந்தார் சமந்தா.பல முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்துவிட்டு சமந்தா அடுத்ததாக தனி ஹீரோயினாகவும் பல படங்களில் நடித்து அசத்தினார்.

இவற்றை தவிர பேமிலி மேன் 2 வெப் சீரிஸில் முக்கிய வேடத்தில் நடித்து பெரிய வரவேற்பை பெற்றார் சமந்தா.அடுத்ததாக சகுந்தலம் மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தயாராகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல்,Dream Warrior Pictures தயாரிப்பில் ஒரு படம்,யசோதா என பிஸியாக உள்ளார் சமந்தா.

இவற்றை தவிர முதன்முறையாக அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா படத்தில் ஒரு பாடலில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார் சமந்தா,இந்த பாடல் பெரிய வரவேற்பை பெற்றது.இவற்றை தவிர இவர் ஒரு ஆங்கில படத்திலும் நடிக்கினார்.Arrangement of Love என்ற நாவலை தழுவி இந்த படம் உருவாகிறது.

அடுத்தடுத்து படங்களில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக சமந்தா மாறியுள்ளார்.இன்று இவர் ஹீரோயினாக நடித்த முதல் படம் வெளியான நாள்,சினிமாவிற்குள் வந்து 12 ஆன்டுகள் ஆனது குறித்து சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.தனக்கு சப்போர்ட் செய்து இந்த நிலையில் வைத்திருக்கும் அனைவர்க்கும் நன்றி தெரிவித்துள்ளார் சமந்தா.தனக்கு கிடைத்த ரசிகர்கள் குறித்தும் நெகிழிச்சியாக பதிவிட்டுள்ளார்.சினிமாவுடனான இந்த லவ் ஸ்டோரி தொடரவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Today marks my 12th year in the Film Industry. It’s been 12 years of memories that revolve around Lights, Camera, action and incomparable moments. I am filled with gratitude for having had this blessed journey and the best, most loyal fans in the world ! pic.twitter.com/2kVjAenIQu

— Samantha (@Samanthaprabhu2) February 26, 2022