தென்னிந்திய சினிமாவில் மிக முக்கிய நடிகைகளில் ஒருவரான நடிகை சாய் பல்லவி அடுத்த நடிக்கும் பெரிய படத்தின் அறிவிப்பு தற்போது வெளியானது. தனது தொலை பயணத்தின் ஆரம்ப கட்டத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்த நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் வெளிவந்து இந்திய அளவில் பெரும் வெற்றி பெற்ற பிரேமம் திரைப்படத்திற்கு பிறகு மிகப் பிரபலம் அடைந்தார். அதை தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்து சாய் பல்லவி நடித்த தியா, மாரி 2, ஃ பிடா படங்களும் நடிகை சாய் பல்லவிக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியது. இந்த வரிசையில் கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டில் சாய்பல்லவி நடிப்பில் வெளிவந்த கார்கி திரைப்படமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு அனைவரது பாராட்டுகளையும் வாங்கி குவித்தது.

அடுத்ததாக தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் SK21 படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்து வருகிறார். உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாக்கி வரும் SK21 திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் காஷ்மீரில் நடைபெற்ற நடைவடைந்த நிலையில் இதர படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது. இதனிடையே அடுத்து சாய் பல்லவி நடிக்கும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் நாக சைதன்யா தனது திரைப் பயணத்தில் 23 வது படமாக நடிக்கும் NC23 திரைப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.

தளபதி 68 படத்தின் இயக்குனரான இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தெலுங்கு தமிழின இரு மொழிகளில் வெளிவந்த கஸ்டடி படத்தில் கடைசியாக நடித்திருந்த நடிகர் நாகசதன்யா அடுத்த நடிக்கும் இந்த NC22 திரைப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் அவர்களின் கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தெலுங்கு சினிமாவில் பல பிளாக் பாஸ்டர் திரைப்படங்களை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் கடைசியாக தனி ஒருவன் படத்தில் தெலுங்கு ரீமேக்கான ராம் சரணின் துருவா மற்றும் அல்லு அர்ஜுனின் அல வைகுண்டபுரம்லு உள்ளிட்ட படங்களை தொடர்ந்து இந்த NC23 திரைப்படத்தையும் தயாரிக்கிறது.

இந்த நிலையில் இப்படத்தில் நடிகை சாய் பல்லவி இணைந்திருப்பதை அறிவித்துள்ள கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தனது twitter பக்கத்தில் படக்குழு உடன் சாய்பல்லவி இணைந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அழகும் திறமையும் கொண்ட நடிகை சாய் பல்லவி NC22 திரைப்படத்தில் இணைந்து இருக்கிறார். NC22 திரைப்படத்தின் ட்ரீட் புரொடக்ஷன் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது என குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறது. கீதா ஆர்ட்ஸ் வெளியிட்ட அந்த அறிவிப்பு பதிவு இதோ...