19 வயது இளைஞனைக் கட்டிப்போட்டு 2 பெண்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஷ்யா நாட்டின் டாட்டர்ஸ்டன் சிட்டி அருகில் உள்ள புகுல்மா பகுதியில், தனது செல்போன் ரிப்பேர் ஆகிவிட்டது என்று, செல்போன் சர்வீஸ் கடைக்கு 22 வயது மதிக்கத் தக்க இளம் பெண் ஒருவர் போன் செய்துள்ளார்.

அப்போது, அங்கிருந்து செல்போனை சரி பார்ப்பதற்காக 19 வயது இளைஞர் ஒருவர் வந்துள்ளார். அந்த இளம் பெண்ணின் வீட்டிற்கு வந்த அவர், செல்போனை வாங்கி பார்த்துவிட்டு, நாளை சரி செய்து எடுத்துவருவதாகக் கூறிவிட்டு, போனை வாங்கிச் சென்றுள்ளார்.

மறுநாள் போனை சரி செய்து, அந்த இளம் பெண்ணின் வீட்டிற்கு அந்த இளைஞர் வந்துள்ளார். அப்போது, அந்த 22 வயது இளம் பெண்ணுடன், ஒரு 32 வயது மதிக்கத் தக்க பெண்ணும் உடன் இருந்துள்ளார்.

இதனையடுத்து, சரிசெய்யப்பட்ட செல்போனை அவர் கொடுத்துள்ளார். அதை வாங்கிப் பார்த்த அந்த பெண், அந்த இளைஞரை உள்ளே கூப்பிட்டு, போன் டேமேஜாக இருப்பதாக கூறி, அந்த இளைஞனை மிரட்டி கட்டிப்போட்டுள்ளனர். பின்னர், அந்த 2 பெண்களும் சேர்ந்து, அந்த இளைஞனைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

அத்துடன், இளைஞனுடன் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து வைத்துக்கொண்ட அந்த பெண்கள், அவரிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.

வீட்டிற்குச் சென்று எடுத்து வருவதாகச் சொல்லிவிட்டு, அங்கிருந்து வெளியேறிய அந்த இளைஞர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, விரைந்து சென்ற போலீசார், இளைஞனைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த 2 பெண்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 பெண்கள் சேர்ந்து 19 வயது இளைஞரைக் கட்டிப்போட்டுக் கூட்டுப் பலாத்காரம் செய்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.