விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா.குறுகிய காலத்தில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் இதயங்களில் இடம்பிடித்துவிட்டார்.இந்த தொடரில் இவரது நடிப்பை பலரும் பாராட்டி வந்தனர்.

இந்த தொடரில் ஹீரோவாக நடிக்கும் சஞ்சீவுக்கும் மானசாவுக்கும் காதல் மலர்ந்தது.இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அறிவித்தனர்.தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இருவரும் ரகசியமாக திருமணம் செய்துகொண்டுள்ளனனர் என்பது தான்.

இந்த செய்தியை சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மானசாவின் பிறந்தநாள் அன்றே இருவரும் திருமணம் செய்துகொண்டதாகவும்.சில காரணங்களால் யாரிடமும் அறிவிக்கவில்லை ஆதலால் தற்போது அறிவிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.இதனை தொடர்ந்து இந்த ஜோடிக்கு அனைத்து தரப்பினரிடம் இருந்தும் வாழ்த்துக்கள் குவிகிறது.