தமிழக சின்னத்திரை ரசிகர்களின் அபிமானமான ஃபேவரட் சீரியல்களில் ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி. ஏற்கனவே ஒரு சீசன் நிறைவடைந்து ராஜா ராணி 2வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகர் பிரிட்டோ தற்போது திருமணத்தை அறிவித்துள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்றாக ரசிகர்களால் கொண்டாடப்படும் தவமாய் தவமிருந்து சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர் பிரிட்டோவும் நடிகை சந்தியா ராமச்சந்திரனும் நடித்திருந்தனர். தங்களது கதாபாத்திரங்களை சிறப்பாக ஏற்று நடித்த இந்த நட்சத்திர ஜோடி ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜோடியாகவும் மிகப் பிரபலமடைந்தது.

முன்னதாக தவமாய் தவமிருந்து தொடரில் இணைந்து நடித்த போது பிரிட்டோ மற்றும் சந்தியா ராமச்சந்திரன் இடையே காதல் உருவாகி தற்போது அது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. ஒருவரை ஒருவர் விரும்பி மனதார காதலித்த இந்த நட்சத்திர ஜோடி அந்த வகையில் இரு குடும்பத்தாரின் சம்மதத்தோடு தற்போது விரைவில் திருமண வாழ்வில் அடி எடுத்து வைக்க தயாராகிவிட்டது.

இந்த காதல் ஜோடியின் திருமணத்திற்கான நிச்சயதார்த்தம் கடந்த ஜனவரி 25ஆம் தேதி நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ நடைபெற்றுள்ளது. தற்போது இதனை தங்களது Instagram பக்கத்தில் தெரிவித்துள்ள பிரிட்டோ மற்றும் சந்தியா ராமச்சந்திரனுக்கு கலாட்டா குழுமம் மனமார வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. வெகு விரைவில் இவர்களது திருமணம் நடைபெறும் என ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.