தமிழ் சினிமாவின் நட்சத்திர இயக்குனராகவும் முன்னணி ஹீரோவாகவும் திகழும் ராகவா லாரன்ஸ் அவர்கள் தனது திரைப்பயணத்தை நடன கலைஞராக தொடங்கியவர். தொடர்ந்து நடன இயக்குனராக தனக்கே உரித்தான ஸ்டைலில் பல சூப்பர் ஹிட் பாடல்களில் நடனமாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த லாரன்ஸ் அவர்கள் தொடர்ந்து இயக்குனர் நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக தன்னை உயர்த்திக் கொண்டார். அந்த வகையில் இயக்குனராக லாரன்ஸ் இயக்கிய தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில் இயக்குனராகவும் நடிகராகவும் ராகவா லாரன்ஸ் தனது ஃபேவரட்டாக தொட்ட ஹாரர் காமெடியில் அடுத்தடுத்து அட்டகாசமான திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்தார். முனி திரைப்படத்திலிருந்து தொடங்கிய இந்த பயணம் காஞ்சனா திரைப்படத்தில் விரிவடைந்தது, தொடர்ந்து காஞ்சனா 2 மற்றும் 3 ஆகிய பாகங்கள் அடுத்தடுத்து வெளிவந்தன. இந்த காஞ்சனா சீரிஸ் படங்கள் பிற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டன. குறிப்பாக ஹிந்தியில் நடிகர் அக்ஷய் குமார் தான் நாயகனாக நடிக்க காஞ்சனா படத்தின் ரீமேக்காக லக்ஷ்மி திரைப்படத்தையும் லாரன்ஸ் இயக்கினார்.

இந்த சீரிஸின் அடுத்த படைப்பாக காஞ்சனா படத்தின் நான்காவது பாகமாக துர்கா திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது இப்படத்தை பிரபல ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவு சகோதரர்கள் இயக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அன்பறிவு சகோதரர்கள் விலகியுள்ளதால் யார் இயக்குகிறார் என்பது குறித்த இதர அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இயக்குனர் வெற்றிமாறன் அவர்களின் தயாரிப்பிலும் திரைக்கதையிலும், இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் அதிகாரம் திரைப்படத்தில் அடுத்ததாக ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாவது பாகமாக இயக்குனர் P.வாசு இயக்கத்தில் உருவாகும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் தற்போது லாரன்ஸ் நடித்து வருகிறார். அதேபோல் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து பெரும் வெற்றி பெற்ற ஜிகர்தண்டா திரைப்படத்தின் இரண்டாவது பாகமாக சமீபத்தில் தொடங்கப்பட்ட ஜிகர்தண்டா DOUBLE X திரைப்படத்தில் SJ.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த வரிசையில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் அதிரடி ஆக்சன் படமாக தயாராகியுள்ள திரைப்படம் ருத்ரன். இயக்குனராக களமிறங்கி இருக்கும் FIVE STAR CREATIONS LLP நிறுவனத்தின் தயாரிப்பாளர் S.கதிரேசன் அவர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள ருத்ரன் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்க, சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ருத்ரன் திரைப்படத்திற்கு RD.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு வெளியீடாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ருத்ரன் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த ருத்ரன் திரைப்படத்தின் முதல் பாடலான பாடாத பாட்டெல்லாம் பாடலின் ரீமேக் வெர்ஷனாக தயாராகி இருக்கும் புதிய பாடாத பாட்டெல்லாம் பாடல் தற்போது வெளியானது. மெல்லிசை மாமன்னர்களான விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்களது இசையில் உருவான பாடாத பாட்டலாம் பாடலின் இந்த ரீமிக்ஸ் வெர்ஷனை பிரபல இசைமைப்பாளர் தரண்குமார் இசையமைத்து ரீமிக்ஸ் செய்துள்ளார். ராகவா லாரன்ஸின் ஸ்டைலான நடனத்தில் வெளிவந்துள்ள இந்த பாடல் தற்போது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. அட்டகாசமான அந்த பாடல் இதோ…