பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் ரச்சிதா.இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் முடித்துக்கொண்டார்.சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார்.

ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு தனது கணவர் தினேஷுடன் இணைந்து ரச்சிதா நாச்சியார்புரம் என்ற தொடரில் நடித்தார்.ஜீ தமிழில் ஒளிபரப்பான இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.கொரோனா பாதிப்பை தொடர்ந்து ஒளிபரப்பான இந்த தொடர் சில காரணங்களால் விரைவில் முடிவுக்கு வந்தது

விஜய் டிவியில் ஹீரோயினாக நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்து வந்தார் ரச்சிதா.சில காரணங்களால் இந்த தொடரில் இருந்து விலகினார்.நடிகரும்,இயக்குனருமான குருப்ரசாத் நடிக்கும் கன்னட படத்தில் ரச்சிதா ஹீரோயினாக அறிமுகமாகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்று வந்தார் ரச்சிதா.சில தொடர்களில் ஸ்பெஷல் என்ட்ரியாக வந்து சென்றார் ரச்சிதா.

இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் ரச்சிதா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.தற்போது இவர் நடிக்கும் புதிய சீரியல் குறித்த அறிவிப்பு ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.கலர்ஸ் தமிழில் மார்ச் 7ஆம் தேதி முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள இது சொல்ல மறந்த கதை என்ற தொடரில் ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த தொடர் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது சொல்ல மறந்த கதை - புத்தம் புதிய தொடர்

மார்ச் 7 முதல், இரவு 9 மணிக்கு #IdhuSMK #Rakshitha #ColorsTamil pic.twitter.com/VvEKH16mRg

— Colors Tamil (@ColorsTvTamil) February 7, 2022