பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் ரச்சிதா.இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் முடித்துக்கொண்டார்.சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார்.
ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு தனது கணவர் தினேஷுடன் இணைந்து ரச்சிதா நாச்சியார்புரம் என்ற தொடரில் நடித்தார்.ஜீ தமிழில் ஒளிபரப்பான இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.கொரோனா பாதிப்பை தொடர்ந்து ஒளிபரப்பான இந்த தொடர் சில காரணங்களால் விரைவில் முடிவுக்கு வந்தது
மீண்டும் விஜய் டிவியில் ஹீரோயினாக தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்து வருகிறார்.மிர்ச்சி செந்தில் ஹீரோவாக நடித்து வரும் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது..நடிகரும்,இயக்கு
இவர் ஹீரோயினாக நடிப்பதால் சீரியலில் இருந்து வெளியேறுவதாக சில தகவல்கள் பரவி வந்தன.இதுகுறித்து ரச்சிதாவும் சில குழப்பமான கமெண்டுகளை பதிவிட ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.மீண்டும் இவர் சீரியலில் வர ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.என்றாலும் இவர் சீரியலில் விலகுவதாக சிலர் வதந்திகளை பரப்பி வந்தனர்,இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சீரியலில் நீடிப்பதாக ஒரு போஸ்டை பதிவு செய்துள்ளார்.