சமீபத்தில் பான் இந்திய திரைப்படம் என்று அனைத்து மொழி துறைகளிலும் அதற்கான வேலைகளில் இயங்கி வருகின்றனர். ஒரு படம் உருவாகும் போதே அப்படத்தின் கதைசாரம் இந்திய அளவு மார்கெட்டை பிடிக்க வேண்டும் என்றே கதையை எழுதி அதன் தயாரிப்பும் அதன்படியே நடைபெற்று வருகிறது. அதன்படி இந்திய திரையுலகில் அடுத்தடுத்து வரக் கூடிய முக்கியமான பான் இந்திய திரைப்படமாக புஷ்பா 2 திரைப்படம் இருந்து வருகிறது. கடந்த 2021 ம் ஆண்டு இந்தியா முழுவதும் பல மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வசூலை குவித்த திரைப்படம் புஷ்பா. இந்திய தவிர உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு மொழிகளில் புஷ்பா திரைப்படம் மிக பிரபலம் குறிப்பாக ரஷ்யா நாட்டில் புது வசூல் சாதனையையே செய்துள்ளது குறிப்பிடதக்கது. செம்மர கடத்தல் சார்ந்த கதைக்களமாக உருவான இப்படத்தினை இயக்குனர் சுகுமாரன் இயக்க ஹீரோவாக அல்லு அர்ஜுன் வித்யாசமான தோற்றத்தில் நடித்திருப்பார். மேலும் இவருடன் ராஷ்மிகா மந்தனா, , ஃபஹத் பாசில், ஜெகதீஸ் பிரதாப் பண்டாரி, சுனில் ராவ் ரமேஷ், தனஞ்சயா, அஜய் கோஷ் அனசுயா பரத்வாஜ், உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். மேலும் படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக தமிழில்.. மேலும் இப்படத்தில் சிறப்பம்சமாக தென்னிந்தியாவின் முன்னணி நடிகை சமந்த சிறப்பு பாடலில் தோன்றி ரசிகர்களுக்கு அட்டகாசமான விருந்தளித்திருப்பார்.

இரண்டு பாகங்களாக உருவான புஷ்பா படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் எதிர்பார்த்து ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்தனர். இதையடுத்து தற்போது புஷ்பா படக்குழு இரண்டாம் பாகமான ‘புஷ்பா தி ரூல்’ என்று பெயரிடப்பட்ட இரண்டாம் பாகத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

சிறையில் இருந்து தப்பித்த புஷ்பாவினை போலீசார் துப்பாக்கியில் சுட்டுள்ளது. பின் காடுகளில் மறைந்துள்ள புஷ்பாவை கண்டுபிடிக்க காவல் துறையினர் ஒருபுறம் தனிப்படை அமைத்து தேட.. அதே நேரத்தில் ஊரில் மக்கள் மத்தியில் நல்ல பெயரை சம்பாதித்து வைத்துள்ள புஷ்பாவிற்கு ஆதரவாக போராட்டம் வெடிக்கின்றது. ஒரு மாதம் முடிந்தும் புஷ்பா எங்கே என்ற கேள்வி நிலவ புலிகளை கண்காணிக்க வைக்கப்பட்ட கேமிராவில் புஷ்பா காடுகளில் இருப்பதை கண்டு மக்கள் உற்சாகமடைந்து பட்டாசுக்களை வெடிக்கின்றனர். மிரட்டலான வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் எதிரபார்பை எகிற வைத்துள்ளனர் புஷ்பா படக்குழுவினர். மேலும் வீடியோவுடன் படத்தின் நடிகர் அல்லு அர்ஜுன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. வீடியோவில் குறிப்பாக ‘புலியே இரண்டு அடி பின்னாடி வெச்சா புஷ்பா வந்துட்டான்னு அர்த்தம்” போன்ற வசனங்கள் படத்தை பக்கா கமர்ஷியல் விருந்தாக உருவாகியிருக்கும் என்று ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அட்டகாசமான கதைகளத்தில் உருவான புஷ்பா தி ரூல் திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது நாளை பிறந்தநாள் காணும் படத்தின் கதாநாயகன் அல்லு அர்ஜுன் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் விருந்தாக இந்த வீடியோ அமைந்துள்ளது. மேலும் நாளை மற்றுமொரு அப்டேட்டும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.முன்னதாக #Whereispushpa என்று ஹாஷ்டக் பயன்படுத்தி சிறப்பு வீடியோவை வெளியிட்டது. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.