விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராகவும் பிரபலமான செய்தி வாசிப்பாளராகவும் வலம் வந்த அனிதா சம்பத் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். பிரபலமான தமிழ் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய அனிதா சம்பத். சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய போது அவர்க்கென மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளமே கிளம்பியது. தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் அனிதா சம்பத்திற்கு ரசிகர்கள் அதிகமாக தொடங்கிய சமயத்தில் பிற தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக களமிறங்கினார்.

பின்னர் விஜய் தொலைக்காட்சியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கிய அனிதா சம்பத் ஆரம்ப முதலே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பின்னர் பிக் பாஸில் எவ்வளவுக்கு எவ்வளவு கவனத்தை ஈர்த்தாரோ அதற்கு தகுந்தார் போல் விமர்சனங்களுக்கும் ஆளாகினார். நிறைய எதிர்மறை விமர்சனங்களையும் வெறுப்புகளையும் சம்பாதித்த அனிதா சம்பத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் பல முக்கிய நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக தற்போது பணியாற்றி வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் நடனமாடி ரசிகர்களின் மனதை கவர்ந்த அனிதா சம்பத் தொடர்ந்து, 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் வகையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் காலத்தில் வெளிவந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். சின்னத்திரையில் மட்டுமல்லாதது சர்க்கார், காலா, காப்பான், 2.0, ஆதித்யா வர்மா, மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் சிறு கதாபாத்திரங்களில் அனிதா சம்பத் நடித்து வருகிறார்.

தற்சமயம் விஜய் தொலைக்காட்சியில் மிக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வரும் நடிகை அனிதா சம்பத் இன்ஸ்டாகிராமில் மிகுந்த ஆக்டிவாக இருப்பவர். 991K+ அதிகமான ஃபாலோவர்கள் இன்ஸ்டாகிராமில் அனிதா சம்பத்தை பின் தொடர்ந்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் தனது கணவர் பிரபாகரனுடன் மாலத்தீவுக்கு சுற்றுப்பயணம் சென்று வந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வந்த நடிகை அனிதா சம்பத் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். பிரபலமான செய்தி வாசிப்பாளராகவும் பிக் பாஸ் போட்டியாளராகவும் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமடைந்த அனிதா சம்பத் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகை அனிதா சம்பத் விரைவில் பூரண குணமடைந்து மீண்டு வர கலாட்டா குழுமம் வேண்டிக்கொள்கிறது. கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் தனக்கு ட்ரிப் ஏற்றப்படும் புகைப்படத்தை நடிகை அனிதா சம்பத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து அதே ஸ்டேட்டஸை பதிவிட்டு “எல்லாம் சில நாளில் மாறிவிடும்” என ஆறுதல் தெரிவித்து அவரது கணவர் பிரபாகரன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் பதிவிட்டு இருக்கிறார். ஆனால் நடிகை அனிதா சம்பத் அவர்களுக்கு என்ன ஆனது எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. இது குறித்து அனிதா சம்பத் தரப்பிலிருந்து விரைவில் தகவல்கள் வரலாம் என என எதிர்பார்க்கப்படுகிறது. அனிதா சம்பத் பதிவிட்ட அந்த புகைப்படம் இதோ...