கேரளாவின் கொச்சின் பகுதியை சேர்ந்த திருநங்கை நடிகையும் பிரபல மாடல் அழகியான ஷெரின் ஷெலின் மேத்யூ மாடலிங் தொழிலில் ஈடுபட்டு வந்ததோடு சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கொச்சியில் உள்ள சக்கரபரம்பு எனும் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஷெரின் ஷெலின் மேத்யூ வசித்து வந்தார்.

நண்பர்களுடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த திருநங்கை நடிகையான ஷெரின் ஷெலின் மேத்யூ தற்போது அவரது வீட்டிலேயே மர்மமான முறையில் இறந்துள்ளார். 26 வயதே ஆன இளம் நடிகை ஷெரின் ஷெலின் மேத்யூ மேத்யூவின் இந்த மர்ம மரணம் கேரளாவில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாடகைக்கு குடியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட நடிகை ஷெரின் ஷெலின் மேத்யூ குறித்து கேரளா போலீஸ் மேற்கொண்ட விசாரணையில் நண்பர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும் அதனால் தற்கொலை செய்து கொண்டிருக்கக்கூடும் என தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன.

முன்னதாக விரைந்து வந்த காவல்துறையினர் நடிகையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இளம் திருநங்கை நடிகை ஷெர்லின் மரணம் குறித்த இதர தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.நடிகை மறைவுக்கு கலாட்டா குடும்பம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

A post shared by sherin Celin Mathew ✨️ (@mysterious_sherin)